search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜெயலலிதா நினைவு தின பேரணியில் பங்கேற்க தொண்டர்களுக்கு முதல்வர், துணை முதல்வர் அழைப்பு
    X

    ஜெயலலிதா நினைவு தின பேரணியில் பங்கேற்க தொண்டர்களுக்கு முதல்வர், துணை முதல்வர் அழைப்பு

    ஜெயலலிதாவின் முதலாமாண்டு நினைவு நாளான டிசம்பர் 5-ம் தேதி சென்னையில் நடைபெறும் பேரணியில் பங்கேற்குமாறு அ.தி.மு.க தொண்டர்களுக்கு முதல்வர் மற்றும் துணை முதல்வர் அழைப்பு விடுத்துள்ளனர்.
    சென்னை:

    மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் முதலாமாண்டு நினைவு தினம் வரும் டிசம்பர் 5-ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இதனை ஒட்டி சென்னை அண்ணா சாலையில் இருந்து மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடம் வரை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் அமைதி பேரணி நடைபெற உள்ளது.

    இந்த பேரணியில் அ.தி.மு.க தொண்டர்கள் திரளானபேர் கலந்துகொள்ள வேண்டும் என அவர்கள் இருவரும் இணைந்து அறிக்கை விடுத்துள்ளனர். அதே நாளில், அண்ணா சாலை முதல் ஜெயலலிதா நினைவிடம் வரை பேரணி நடத்த அனுமதி வேண்டும் என டி.டி.வி தினகரன் ஆதரவாளர் கலைராஜன் சென்னை காவல் ஆணையாளர் அலுவலகத்தில் இன்று மனு அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×