என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பவானிசாகர் அணைக்கு மிதமான தண்ணீர் வரத்து: வாய்க்கால்களுக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தம்
Byமாலை மலர்22 Nov 2017 10:02 AM GMT (Updated: 22 Nov 2017 10:02 AM GMT)
ஊட்டி மலை பகுதிகளில் பெய்து வரும் மழையால் பவானிசாகர் அணைக்கும் மிதமான தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் மழை பெய்வது நின்று விட்டாலும் அவ்வப்போது மாவட்டத்தின் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் நேற்று மாலை ஈரோடு நகரின் புறநகர் பகுதிகளான மூலப்பாளையம், ஆணைக்கல்பாளையம், 46 புதூர், லக்காபுரம் ஆகிய பகுதிகளில் 15 நிமிடம் பலத்த மழை பெய்தது. இந்த மழையால் ஆங்காங்கே தண்ணீர் ஓடியது.
லக்காபுரம், 46 புதூர் பகுதிகளில் விவசாயிகள் தங்கள் வயலில் நெல் நடவுக்காக நிலத்தை தயார் நிலையில் சமப்படுத்தி வைத்திருந்தனர். அந்த வயல்களில் மழை தண்ணீர் தேங்கி நிலத்தை மேலும் பதப்படுத்தியது. இது விவசாயிகளை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.
மேலும் நேற்று சென்னிமலை பகுதியில் 8 மி.மீ மழையும், கொடுமுடியில் 2 மி.மீ மழையும் பதிவாகி இருந்தது.
மாவட்டத்தின் நீர் ஆதாரமாக உள்ள பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து குறைந்தாலும் மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
இன்று (புதன்கிழமை) காலை 9 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 993 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையின் நீர்மட்டம் 71.79 அடியாக உள்ளது.
ஊட்டி மலை பகுதிகளில் பெய்து வரும் மிதமான மழையால் பவானிசாகர் அணைக்கும் மிதமான தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
அணையில் இருந்து பாசனத்துக்கு கீழ்பவானி வாய்க்கால், காளிங்கராயன் வாய்க்கால், தடப்பள்ளி- அரக்கன்கோட்டை வாய்க்கால்களுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டிருந்தது.
சுழற்சி அடிப்படையில் தண்ணீர் திறப்பால் 3 வாய்க்கால்களுக்கும் தண்ணீர் திறந்து விடுவது தற்போது நிறுத்தப்பட்டு உள்ளது. இன்னும் சில நாட்களில் தொடர்ந்து மீண்டும் வாய்க்கால்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஈரோடு மாவட்டத்தில் மழை பெய்வது நின்று விட்டாலும் அவ்வப்போது மாவட்டத்தின் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் நேற்று மாலை ஈரோடு நகரின் புறநகர் பகுதிகளான மூலப்பாளையம், ஆணைக்கல்பாளையம், 46 புதூர், லக்காபுரம் ஆகிய பகுதிகளில் 15 நிமிடம் பலத்த மழை பெய்தது. இந்த மழையால் ஆங்காங்கே தண்ணீர் ஓடியது.
லக்காபுரம், 46 புதூர் பகுதிகளில் விவசாயிகள் தங்கள் வயலில் நெல் நடவுக்காக நிலத்தை தயார் நிலையில் சமப்படுத்தி வைத்திருந்தனர். அந்த வயல்களில் மழை தண்ணீர் தேங்கி நிலத்தை மேலும் பதப்படுத்தியது. இது விவசாயிகளை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.
மேலும் நேற்று சென்னிமலை பகுதியில் 8 மி.மீ மழையும், கொடுமுடியில் 2 மி.மீ மழையும் பதிவாகி இருந்தது.
மாவட்டத்தின் நீர் ஆதாரமாக உள்ள பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து குறைந்தாலும் மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
இன்று (புதன்கிழமை) காலை 9 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 993 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையின் நீர்மட்டம் 71.79 அடியாக உள்ளது.
ஊட்டி மலை பகுதிகளில் பெய்து வரும் மிதமான மழையால் பவானிசாகர் அணைக்கும் மிதமான தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
அணையில் இருந்து பாசனத்துக்கு கீழ்பவானி வாய்க்கால், காளிங்கராயன் வாய்க்கால், தடப்பள்ளி- அரக்கன்கோட்டை வாய்க்கால்களுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டிருந்தது.
சுழற்சி அடிப்படையில் தண்ணீர் திறப்பால் 3 வாய்க்கால்களுக்கும் தண்ணீர் திறந்து விடுவது தற்போது நிறுத்தப்பட்டு உள்ளது. இன்னும் சில நாட்களில் தொடர்ந்து மீண்டும் வாய்க்கால்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X