search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையில் இருந்து பி.கே.ஆறுமுக பாண்டியன் நீக்கம்: ஜெ.தீபா
    X

    எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையில் இருந்து பி.கே.ஆறுமுக பாண்டியன் நீக்கம்: ஜெ.தீபா

    பி.கே.ஆறுமுக பாண்டியனை தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் பதவியில் இருந்தும், பேரவையின் அடிப்படை உறுப்பினர் நிலையில் இருந்தும் நீக்கப்படுகிறார் என ஜெ.தீபா கூறியுள்ளார்.
    சென்னை:

    எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை பொதுச் செயலாளர் ஜெ.தீபா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவைக்கு களங்கம் ஏற்படும் வகையில் பி.கே.ஆறுமுக பாண்டியன் செயல்படுவதாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பேரவை தொண்டர்கள் எனக்கு புகார் அனுப்பினார்கள். எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையின் சட்டதிட்டங்களை மீறி கட்டுப்பாடு இல்லாமல், தான் ஒரு மாவட்ட பொறுப்பாளர் என்பதை மறந்து செயல்பட்ட காரணங்களால் பி.கே.ஆறுமுக பாண்டியனை தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் பதவியில் இருந்தும், பேரவையின் அடிப்படை உறுப்பினர் நிலையில் இருந்தும் 20-ந்தேதி(திங்கட்கிழமை) முதல் நீக்கப்படுகிறார். பேரவை தொண்டர்கள் யாரும் பி.கே.ஆறுமுக பாண்டியனோடு, பேரவை செயல்பாடுகள் குறித்து தொடர்பு கொள்ள வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×