search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆரணியில் தொழிலாளி வீட்டில் நகை திருட்டு
    X

    ஆரணியில் தொழிலாளி வீட்டில் நகை திருட்டு

    ஆரணியில் தொழிலாளி வீட்டில் நகை திருடிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆரணி:

    ஆரணி பாரதியார் தெரு என்.எஸ்.நகரை சேர்ந்தவர் சையது படேல் மகன் ஜமீல் பாபு (வய 48). நெசவு கூலித் தொழிலாளி. இவர், நேற்று வழக்கம் போல் வேலைக்கு சென்றுவிட்டார்.

    அவருடைய மனைவி, மகளும் வீட்டை பூட்டி விட்டு வெளியில் சென்றிருந்தனர்.இதை கவனித்த திருட்டு கும்பல், கதவு பூட்டை நீக்கி உள்ளே புகுந்தனர்.

    வீட்டில் இருந்த நெக்லஸ் உள்பட 8 பவுன் நகைகள் மற்றும் ரூ.4 ஆயிரம் பணம் உள்ளிட்ட பொருட்களை கொள்ளையடித்து கொண்டு தப்பிச் சென்றனர்.

    இதுகுறித்து, ஜமீல் பாபு ஆரணி டவுன் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிந்து, திருட்டு கும்பலை தீவிரமாக தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×