search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவேற்காட்டில் போலீஸ் விசாரணைக்கு பயந்து 15 வயது சிறுவன் தற்கொலை
    X

    திருவேற்காட்டில் போலீஸ் விசாரணைக்கு பயந்து 15 வயது சிறுவன் தற்கொலை

    திருவேற்காட்டில் மோட்டார் சைக்கிள் திருட்டு சம்பந்தமாக போலீஸ் விசாரணைக்கு பயந்து 15 வயது சிறுவன் தற்கொலை செய்து கொண்டான்.
    பூந்தமல்லி:

    ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்தவர் சின்னா. இவரது மனைவி ஜெயசிலி. இவர்கள் அயப்பாக்கம் ஊராட்சியில் துப்புரவு பணியாளர்களாக வேலை பார்த்து வருகிறார்கள். குடும்பத்துடன் திருவேற்காட்டில் தங்கி உள்ளனர்.

    இவர்களது 3-வது மகன் டேவிட் (15) நேற்று திடீரென்று மாயமானான். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பல இடங்களில் தேடினர்.

    இந்த நிலையில் இன்று காலை திருவேற்காடு அபிராமி நகரில் உள்ள உறவினர் வீட்டில் சிறுவன் டேவிட் தூக்கில் பிணமாக தொங்கினான்.

    இதனால் பெற்றோர் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சிறுவன் உடலை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து சிறுவனின் பெற்றோர் கூறுகையில், “எனது மகனை மோட்டார் சைக்கிள் திருட்டு சம்பந்தமாக திருவேற்காடு போலீசார் கடந்த 2 தினங்களாக அழைத்து சென்று விசாரணை நடத்தினார்கள். அவனுடன் பழகிய நண்பர்கள் திருட்டில் ஈடுபட்டதாக கூறி விசாரித்துள்ளனர்.

    இன்று காலையும் விசாரணைக்கு வருமாறு போலீசார் கூறியிருந்தனர். இதனால் அவன் பயத்தில் இருந்து வந்தான். இதில் அவன் தற்கொலை செய்துள்ளான்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.
    Next Story
    ×