என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆழ்வார்குறிச்சி அருகே மழையில் சுவர் இடிந்து காயமடைந்த பெண் மரணம்
Byமாலை மலர்20 Nov 2017 2:53 PM GMT (Updated: 20 Nov 2017 2:54 PM GMT)
ஆழ்வார்குறிச்சி அருகே கடந்த 2-ந்தேதி பலத்த மழை பெய்தது. இதில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் காயம் அடைந்த பெண் பரிதாபமாக இறந்தார்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள பொட்டல் புதூர் பகுதியை சேர்ந்தவர் இசக்கி. இவரது மனைவி செல்லம்மாள் (வயது42). இவர் கடந்த 2-ந்தேதி வீட்டில் படுத்து இருந்தார்.அப்போது பலத்த மழை பெய்தது. இதில் அவரது வீட்டின் ஒரு பக்க சுவர் இடிந்து அவர் மீது விழுந்தது.
இதில் செல்லம்மாள் பலத்த காயம் அடைந்தார். அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு பாளை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று அதிகாலை செல்லம்மாள் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து ஆழ்வார்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நெல்லை மாவட்டம் ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள பொட்டல் புதூர் பகுதியை சேர்ந்தவர் இசக்கி. இவரது மனைவி செல்லம்மாள் (வயது42). இவர் கடந்த 2-ந்தேதி வீட்டில் படுத்து இருந்தார்.அப்போது பலத்த மழை பெய்தது. இதில் அவரது வீட்டின் ஒரு பக்க சுவர் இடிந்து அவர் மீது விழுந்தது.
இதில் செல்லம்மாள் பலத்த காயம் அடைந்தார். அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு பாளை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று அதிகாலை செல்லம்மாள் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து ஆழ்வார்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X