என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தூத்துக்குடியில் ரெயில் தண்டவாளத்தில் பிணமாக கிடந்த லாரி டிரைவர்
Byமாலை மலர்20 Nov 2017 12:25 PM GMT (Updated: 20 Nov 2017 12:25 PM GMT)
தூத்துக்குடி அமுதா நகரில் உள்ள ரெயில்வே தண்டவாளத்தில் லாரி டிரைவர் பிணமாக கிடந்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி அமுதா நகரில் உள்ள ரெயில்வே தண்டவாளத்தில் இன்று காலை சுமார் 20 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்தார். இது குறித்து தகவலறிந்த தூத்துக்குடி ரெயில்வே போலீசார் மற்றும் தென்பாகம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து அங்கு உடலை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
விசாரணையில் பிணமாக கிடந்தவர் தூத்துக்குடி சாந்தி நகரை சேர்ந்த கருப்பசாமி மகன் குருமூர்த்தி (வயது 20) என்பதும், லாரி டிரைவராக பணியாற்றியதும் தெரிய வந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் சம்பவ இடத்திற்கு திரண்டு வந்தனர். அவர்கள் குருமூர்த்தி உடலை பார்த்து கதறி அழுதனர்.
இதையடுத்து போலீசார் குருமூர்த்தி உடலை சம்பவ இடத்தில் இருந்து மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். குருமூர்த்தி ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு யாரேனும் அவரை அடித்துக்கொலை செய்து விட்டு உடலை ரெயில் தண்டவாளத்தில் வீசி சென்றார்களா? என்பது தெரியவில்லை.
இதுகுறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். குருமூர்த்திக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று இரவும் அவர் பஜார் பகுதியில் குடிபோதையில் நின்றுள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில் யாரேனும் அவரை அடித்துக்கொன்று விட்டு திசை திருப்புவதற்காக உடலை தண்டவாளத்தில் வீசி சென்றிருக்கலாம்? என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
எனவே அந்த கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்துகின்றனர். லாரி டிரைவர் ரெயில் தண்டவாளத்தில் பிணமாக கிடந்த சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தூத்துக்குடி அமுதா நகரில் உள்ள ரெயில்வே தண்டவாளத்தில் இன்று காலை சுமார் 20 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்தார். இது குறித்து தகவலறிந்த தூத்துக்குடி ரெயில்வே போலீசார் மற்றும் தென்பாகம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து அங்கு உடலை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
விசாரணையில் பிணமாக கிடந்தவர் தூத்துக்குடி சாந்தி நகரை சேர்ந்த கருப்பசாமி மகன் குருமூர்த்தி (வயது 20) என்பதும், லாரி டிரைவராக பணியாற்றியதும் தெரிய வந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் சம்பவ இடத்திற்கு திரண்டு வந்தனர். அவர்கள் குருமூர்த்தி உடலை பார்த்து கதறி அழுதனர்.
இதையடுத்து போலீசார் குருமூர்த்தி உடலை சம்பவ இடத்தில் இருந்து மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். குருமூர்த்தி ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு யாரேனும் அவரை அடித்துக்கொலை செய்து விட்டு உடலை ரெயில் தண்டவாளத்தில் வீசி சென்றார்களா? என்பது தெரியவில்லை.
இதுகுறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். குருமூர்த்திக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று இரவும் அவர் பஜார் பகுதியில் குடிபோதையில் நின்றுள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில் யாரேனும் அவரை அடித்துக்கொன்று விட்டு திசை திருப்புவதற்காக உடலை தண்டவாளத்தில் வீசி சென்றிருக்கலாம்? என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
எனவே அந்த கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்துகின்றனர். லாரி டிரைவர் ரெயில் தண்டவாளத்தில் பிணமாக கிடந்த சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X