search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இலவச லேப்-டாப் வழங்காததை கண்டித்து மாணவர்கள் கலெக்டரிடம் மனு
    X

    இலவச லேப்-டாப் வழங்காததை கண்டித்து மாணவர்கள் கலெக்டரிடம் மனு

    இலவச லேப்-டாப் வழங்காததை கண்டித்து தஞ்சை மாவட்ட கலெக்டரிடம் மாணவர்கள் மனு அளித்தனர்.
    தஞ்சாவூர்:

    தஞ்சை தெற்கு வீதியில் அரசு உதவிபெறும் வீரராகவ மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் கடந்த 2016-17-ம் ஆண்டில் பிளஸ்-2 படித்த சுமார் 32 மாணவர்கள் சீனிவாசன் தலைமையில் இன்று தஞ்சை கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அதன்பின்னர் அவர்கள் கலெக்டரை சந்தித்து ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர்.

    கடந்தாண்டு அரசு சார்பில் மாணவர்களுக்கு இலவச லேப்-டாப் வழங்கப்பட்டது. ஆனால் நாங்கள் படித்த பள்ளியில் சுமார் 32 மாணவர்களுக்கு லேப்-டாப் வழங்கப்படவில்லை.

    இதனால் பாதிக்கப்பட்ட நாங்கள் பள்ளி நிர்வாகத்திடம் முறையீட்டும் பலன் இல்லை. எனவே தாங்கள் இதில் தலையிட்டு இலவச லேப்-டாப் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் மனுவில் தெரிவித்துள்ளனர்.
    Next Story
    ×