search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆண்டிப்பட்டி அருகே பொது பாதை பிரச்சினையில் தந்தை-மகன் மீது தாக்குதல்
    X

    ஆண்டிப்பட்டி அருகே பொது பாதை பிரச்சினையில் தந்தை-மகன் மீது தாக்குதல்

    ஆண்டிப்பட்டி அருகே பொதுப்பாதை பிரச்சினையில் தந்தை- மகன் தாக்கப்பட்டனர்.

    தேனி:

    ஆண்டிப்பட்டி அருகே ரோசனம்பட்டி காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் தங்கப்பன் (வயது 55). அதே பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல் (வயது61). இருவரும் உறவினர்கள். இருவரின் தோட்டத்தின் நடுவே தண்ணீர் தேங்குவதில் தகராறு இருந்து வந்தது.

    இதனால் தொடர்ந்து பிரச்சினை ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று தங்கப்பன் மற்றும் அவரது மகன் ஜெயராஜ் தோட்டத்தில் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டு இருந்த போது அங்கு வந்த சக்திவேல் இது தொடர்பாக வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

    பின்பு 2 பேரையும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். இது குறித்து ராஜதானி போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் சக்திவேல் மீது வழக்கு பதிவு செய்தனர். இதே போல் சக்திவேல் கொடுத்த புகாரின் பேரில் 2 பேர் மீதும் வழக்கு பதிவு செய்தனர்.

    Next Story
    ×