search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சேலம் அருகே சிறுமி பாலியல் பலாத்காரம்: வாலிபர் கைது
    X

    சேலம் அருகே சிறுமி பாலியல் பலாத்காரம்: வாலிபர் கைது

    சேலம் அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை கைது போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    சேலம்:

    சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே உள்ள தேவூர், செட்டிப்பட்டி கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமி தனது தந்தையுடன் ஈரோடு மாவட்டத்திற்கு விறகு உடைக்கும் வேலைக்கு சென்று வந்தார்.

    சம்பவத்தன்று ஈரோடு மாவட்டத்துக்கு வேலைக்கு சென்ற சிறுமி திடீரென மாயமானார். இதனால் மகளை பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் மகளை கண்டுபிடிக்க முடியவில்லை.

    இந்த சம்பவம் குறித்து சங்ககிரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் சிறுமியை ஈரோடு மாவட்டம் பெருந்துறையை சேர்ந்த கோவிந்தன் மகன் குமார் (வயது 32) என்பவர் கடத்தி சென்றிருப்பதும் அவர் தலைமறைவாக இருப்பதும் தெரியவந்தது.

    போலீசார் தலைமறைவாக இருந்த குமாரை பிடித்து கைது செய்து, அவரிடம் இருந்து சிறுமியை மீட்டனர். அப்போது அந்த சிறுமி கர்ப்பமாக இருந்தார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார், வாலிபர் குமாரிடம் தீவிரமாக விசாரிக்கையில் ஆசைவார்த்தை கூறி சிறுமியை கடத்தி சென்று அடைத்து வைத்து அவர் பாலியல் பலாத்காரம் செய்திருப்பது தெரியவந்தது.

    பின்னர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வீரம்மாள், போஸ்கோ சட்டத்தின் கீழ் வாலிபர் குமாரை கைது செய்து, ஜெயிலில் அடைத்தார்.
    Next Story
    ×