search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சோளிங்கர் கடையில் செல்போன்கள் கொள்ளை
    X

    சோளிங்கர் கடையில் செல்போன்கள் கொள்ளை

    சோளிங்கரில் செல்போன் கடையில் பூட்டை உடைத்து ரூ.5 லட்சம் மதிப்பிலான செல்போன்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்தனர்.

    சோளிங்கர்:

    சோளிங்கர் டவுன் காந்தி சாலையில் உள்ள பெருமாள் கோவில் பகுதியை சேர்ந்தவர் அரங்கநாயகி (வயது 62). ஓய்வுப்பெற்ற ஆசிரியை. இவர், அதே பகுதியை செல்போன் கடை நடத்தி வருகிறார்.

    நேற்றிரவு 10 மணியளவில் பணி நேரம் முடிந்தவுடன் ஊழியர்கள் வழக்கம் போல் செல்போன் கடையை பூட்டி உரிமையாளரிடம் சாவியை கொடுத்துவிட்டு சென்றனர். இன்று காலையில் பார்த்த போது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது.

    கடைக்குள் இருந்த சுமார் ரூ.5 லட்சம் மதிப்பிலான செல்போன்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து தப்பிச் சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து, சோளிங்கர் போலீசில் புகார் அளித்தனர்.இன்ஸ்பெக்டர் காண்டீபன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×