என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விக்கிரவாண்டி அருகே கற்பழித்து கொலை செய்யப்பட்ட இளம்பெண் யார்?: தனிப்படை தீவிரம்
Byமாலை மலர்20 Nov 2017 10:25 AM GMT (Updated: 20 Nov 2017 10:25 AM GMT)
இளம்பெண்ணை கொலை செய்த வாலிபரை தனிப்படை போலீசார் விழுப்புரம் மாவட்டத்தில் தீவிரமாக தேடி வருகின்றனர்.
விக்கிரவாண்டி:
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள ஒரத்தூர் லட்சுமிபுரத்தில் உள்ள ஓடையில் 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் அரை நிர்வாண நிலையில் பிணமாக கிடந்தார்.
இது பற்றி தகவல் அறிந்ததும் விக்கிரவாண்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இறந்து கிடந்த பெண்ணின் உடலை பார்வையிட்டனர்.
அந்த பெண்ணின் உடலில் ரத்தக் காயங்கள் இருந்தன. அருகில் பச்சை நிற சேலை மற்றும் ஒரு மதுபாட்டில் கிடந்தது. விழுப்புரம் தடயவியல் உதவி இயக்குனர் சண்முகம் நேரில் வந்து, தடயங்களை சேகரித்தார். அங்கு கிடந்த மதுபாட்டிலில் பதிவாகி இருந்த கை ரேகைகளை பதிவு செய்தார். இறந்து கிடந்த பெண்ணின் கழுத்து பகுதியில் காயங்கள் இருந்தன. எனவே அவர் சேலையால் கழுத்தை இறுக்கி கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.
மேலும் அந்த பெண்ணின் கழுத்தில் நகைகள் எதுவும் இல்லை. காலில் மெட்டியும் அணியவில்லை. இறந்து கிடந்த பெண் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்று தெரியவில்லை. யாரோ மர்ம வாலிபர் அந்த இளம்பெண்ணிடம் ஆசைவார்த்தை கூறி மோட்டார் சைக்கிளில் ஓடைக்கரை அருகே அழைத்து சென்றுள்ளார்.
அங்கு வைத்து மது அருந்தி விட்டு அந்த பெண்ணிடம் அவர் உல்லாசமாக இருந்துள்ளார். அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் அந்த மர்ம வாலிபர் அந்த பெண் அணிந்திருந்த சேலையால் கழுத்தை இறுக்கி கொலை செய்து விட்டு பிணத்தை அங்கேயே வீசி விட்டு சென்றுள்ளார்.
இறந்த பெண் யார்? என்பதை கண்டறிய இன்ஸ்பெக்டர் இளஞ்செழியன், சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுப்பையா ஆகியோர் தலைமையில் 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த தனிப்படையினர் விழுப்புரம், கடலூர், செஞ்சி, புதுவை போன்ற பகுதிகளுக்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இறந்து கிடந்த பெண்ணின் புகைப்படத்தை விழுப்புரம், கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் அனுப்பி வைத்து துப்பு துலக்கி வருகிறார்கள்.
மேலும் விழுப்புரம் பகுதியில் சமீபத்தில் இளம்பெண்கள் யாரும் காணாமல் போனது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளதா? என்றும் அவர்களது விவரங்களையும் சேகரித்து வருகின்றனர்.
இளம்பெண்ணை கொலை செய்த வாலிபரை தனிப்படை போலீசார் விழுப்புரம் மாவட்டத்தில் தீவிரமாக தேடி வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள ஒரத்தூர் லட்சுமிபுரத்தில் உள்ள ஓடையில் 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் அரை நிர்வாண நிலையில் பிணமாக கிடந்தார்.
இது பற்றி தகவல் அறிந்ததும் விக்கிரவாண்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இறந்து கிடந்த பெண்ணின் உடலை பார்வையிட்டனர்.
அந்த பெண்ணின் உடலில் ரத்தக் காயங்கள் இருந்தன. அருகில் பச்சை நிற சேலை மற்றும் ஒரு மதுபாட்டில் கிடந்தது. விழுப்புரம் தடயவியல் உதவி இயக்குனர் சண்முகம் நேரில் வந்து, தடயங்களை சேகரித்தார். அங்கு கிடந்த மதுபாட்டிலில் பதிவாகி இருந்த கை ரேகைகளை பதிவு செய்தார். இறந்து கிடந்த பெண்ணின் கழுத்து பகுதியில் காயங்கள் இருந்தன. எனவே அவர் சேலையால் கழுத்தை இறுக்கி கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.
மேலும் அந்த பெண்ணின் கழுத்தில் நகைகள் எதுவும் இல்லை. காலில் மெட்டியும் அணியவில்லை. இறந்து கிடந்த பெண் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்று தெரியவில்லை. யாரோ மர்ம வாலிபர் அந்த இளம்பெண்ணிடம் ஆசைவார்த்தை கூறி மோட்டார் சைக்கிளில் ஓடைக்கரை அருகே அழைத்து சென்றுள்ளார்.
அங்கு வைத்து மது அருந்தி விட்டு அந்த பெண்ணிடம் அவர் உல்லாசமாக இருந்துள்ளார். அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் அந்த மர்ம வாலிபர் அந்த பெண் அணிந்திருந்த சேலையால் கழுத்தை இறுக்கி கொலை செய்து விட்டு பிணத்தை அங்கேயே வீசி விட்டு சென்றுள்ளார்.
இறந்த பெண் யார்? என்பதை கண்டறிய இன்ஸ்பெக்டர் இளஞ்செழியன், சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுப்பையா ஆகியோர் தலைமையில் 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த தனிப்படையினர் விழுப்புரம், கடலூர், செஞ்சி, புதுவை போன்ற பகுதிகளுக்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இறந்து கிடந்த பெண்ணின் புகைப்படத்தை விழுப்புரம், கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் அனுப்பி வைத்து துப்பு துலக்கி வருகிறார்கள்.
மேலும் விழுப்புரம் பகுதியில் சமீபத்தில் இளம்பெண்கள் யாரும் காணாமல் போனது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளதா? என்றும் அவர்களது விவரங்களையும் சேகரித்து வருகின்றனர்.
இளம்பெண்ணை கொலை செய்த வாலிபரை தனிப்படை போலீசார் விழுப்புரம் மாவட்டத்தில் தீவிரமாக தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X