என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருச்சியில் இருந்து தென்காசிக்கு மணல் கடத்திய 5 லாரிகள் பறிமுதல்
Byமாலை மலர்20 Nov 2017 10:21 AM GMT (Updated: 20 Nov 2017 10:21 AM GMT)
திருச்சியில் இருந்து தென்காசிக்கு மணல் கடத்திய 5 லாரிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
விருதுநகர்:
ஸ்ரீவில்லிபுத்தூர்- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர்கள் ரவிச்சந்திரன், சந்தோஷ் ஆகியோர் ரோந்து சென்றனர்.
அப்போது திருச்சியில் இருந்து 5 லாரிகள் அதிவேகமாக வந்தன. அந்த லாரிகளை தடுத்து நிறுத்தி சோதனை மேற் கொண்டனர். 5 லாரிகளிலும் ஆற்றுமணல் கடத்தப்படுவது தெரியவந்தது. அவற்றுக்கு உரிய ஆவணங்கள் இல்லை.
எனவே அந்த லாரிகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணையில், ஆற்று மணல் தென்காசிக்கு கடத்தப்படுவது தெரியவந்தது.
லாரியை ஓட்டி வந்த கரூர் மாவட்டம், கீழ வள்ளியூரைச் சேர்ந்த இளையராஜா, திருச்சியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, செந்தில் குமார், குளித்தலையைச் சேர்ந்த அரவிந்தன், சரவணன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X