search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விருதுநகர் அருகே ரெயில் தண்டவாளத்தில் வாலிபர் பிணம்
    X

    விருதுநகர் அருகே ரெயில் தண்டவாளத்தில் வாலிபர் பிணம்

    விருதுநகர் அருகே ரெயில் தண்டவாளத்தில் வாலிபர் பிணமாக கிடந்தார். அவர் எப்படி இறந்தார்? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    விருதுநகர்:

    விருதுநகர்-சாத்தூர் இடையே நடுவப்பட்டி விலக்கில் உள்ள ரெயில்வே தண்டவாளத்தில் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் இறந்து கிடந்தார்.

    இது குறித்து ரெயில்வே போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தூத்துக்குடி ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். இறந்து கிடந்த வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பின்னர் நடைபெற்ற விசாரணையில் ரெயில் தண்டவாளத்தில் இறந்து கிடந்த வாலிபர் விருதுநகர் இ. முத்துலிங்காபுரத்தைச் சேர்ந்த குரூஸ் அந்தோணி (வயது 25) என்று தெரியவந்தது.

    அவர் தண்டவாளத்தை கடந்தபோது அந்த வழியாக வந்த ரெயில் மோதி இறந்தாரா? அல்லது ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்தாரா? என்பது தெரியவில்லை. தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.

    Next Story
    ×