search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திரு.வி.க நகர் போலீஸ் நிலையத்தில் கைதி தற்கொலை முயற்சி
    X

    திரு.வி.க நகர் போலீஸ் நிலையத்தில் கைதி தற்கொலை முயற்சி

    திரு.வி.க நகர் போலீஸ் நிலையத்தில் கைதி தற்கொலை முயற்சி செய்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெரம்பூர்:

    திரு.வி.க நகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன், ஏட்டு பாலசுப்பிரமணியம் மற்றும் போலீசார் திருவிக நகர் கோபாலபுரம் அருகே நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது போலீசாரை பார்த்ததும் மோட்டார் சைக்கிளில் வந்தவர் வேகமாக கடந்து சென்றார். விரட்டிச் சென்று மடக்கி பிடித்த போலீசார் அவரை திரு.வி.க.நகர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினார்கள்.

    விசாரணையில் அவரது பெயர் சரவணன் என்றும், திரு.வி.க.நகரில் உள்ள காமராஜர் நகர் 1-வது தெருவை சேர்ந்தவர் என்றும் தெரிய வந்தது. இவர் ஒரு பழைய குற்றவாளி. தூத்துக்குடி வக்கீல் மற்றும் மாதவரம் கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்டவர். மேலும் இவர் மீது செம்பியம், மாதவரம், திரு.வி.க.நகர், விருகம்பாக்கம் போலீஸ் நிலையங்களில் 17 செயின் பறிப்பு வழக்குகளும், செல்போன் திருட்டு வழக்குகளும் உள்ளன.

    கடந்த மாதம் (அக்டோபர்) 20-ந்தேதி குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறைதண்டனை அனுபவித்து வெளியே வந்தார். நேற்று முழுவதும் இவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

    விசாரணை தொடர இருந்த நிலையில் இன்று காலை போலீஸ் நிலையத்தில் இருந்த டியூப் லைட்டை உடைத்து தனது தொண்டையில் குத்தி தற்கொலைக்கு முயற்சி செய்தார்.

    உடனே தடுத்து நிறுத்திய போலீசார் அவரை அங்குள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை அளித்தனர். இதுகுறித்து திரு.வி.க.நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமணி வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினார்.

    Next Story
    ×