என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
கோவையில் நண்பர் இறந்த துக்கத்தில் மருத்துவ பிரதிநிதி தூக்குப்போட்டு தற்கொலை
கோவை:
கோவை கணபதி தென்றல் நகரை சேர்ந்தவர் மகிம் அலிகான் (வயது 57). மருத்துவப் பிரதிநிதி. இவரது நண்பர் முரளி. பால்ய சினேகிதர்களான இவர்கள் பள்ளி படிப்பு வரை ஒன்றாகவே படித்தனர். அடிக்கடி சந்தித்து மகிழ்ந்தனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு முரளி திடீரென இறந்தார். நண்பரின் இழப்பு மகிம் அலிகானை வேதனை அடைய செய்தது.
நண்பர் குறித்து அடிக்கடி குடும்பத்தினரிடம் கூறி புலம்பினார். குடும்பத்தினரும் அவருக்கு ஆறுதல் கூறி வந்தனர். இருந்தாலும் சமாதானம் அடையாத மகிம் அலிகான் குடிபோதைக்கு அடிமையானார். அப்போதும் தனது நண்பரை பற்றியே பேசி வந்தார்.
இந்நிலையில் நேற்று இரவு வீட்டில் தூக்குப்போட்டார். சத்தம் கேட்டு குடும்பத்தினர் பார்த்தபோது அவர் தூக்கில் தொங்கிய நிலையில் துடித்துக்கொண்டிருந்தார். அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அங்கு மகிம் அலிகானை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இது குறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்