என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கும்பக்கரை அருவிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு
Byமாலை மலர்19 Nov 2017 11:24 AM GMT (Updated: 19 Nov 2017 11:24 AM GMT)
கும்பக்கரை அருவிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.
பெரியகுளம்:
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி அடிவாரத்தில் அமைந்துள்ளது கும்பக்கரை அருவி. கொடைக்கானல் மலைப்பகுதியில் பெய்யும் மழையால் அருவிக்கு நீர்வரத்து இருக்கும். கடந்த சில நாட்களாக கொடைக் கானலில் சாரல் மழை பெய்ததால் கும்பக்கரை அருவியில் சீரான நீர்வரத்து உள்ளது.
மூணாறு, தேக்கடி உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா வந்த பயணிகள் கும்பக்கரை அருவியில் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர். தற்போது அய்யப்பன் சீசன் தொடங்கியுள்ளதால் சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் கும்பக்கரைக்கு வரத்தொடங்கியுள்ளனர்.
ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து அய்யப்ப பக்தர்கள் கும்பக்கரை அருவிக்கு வந்து செல்கின்றனர்.
அறிவிப்பு பலகை தமிழில் உள்ளதால் அவர்கள் அருவிக்கு சென்றடைவதில் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே பெரியகுளம்-மதுரை சாலையில் கும்பக்கரை பிரிவு அருகே வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகை ஆங்கிலத்திலும் இருக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி அடிவாரத்தில் அமைந்துள்ளது கும்பக்கரை அருவி. கொடைக்கானல் மலைப்பகுதியில் பெய்யும் மழையால் அருவிக்கு நீர்வரத்து இருக்கும். கடந்த சில நாட்களாக கொடைக் கானலில் சாரல் மழை பெய்ததால் கும்பக்கரை அருவியில் சீரான நீர்வரத்து உள்ளது.
மூணாறு, தேக்கடி உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா வந்த பயணிகள் கும்பக்கரை அருவியில் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர். தற்போது அய்யப்பன் சீசன் தொடங்கியுள்ளதால் சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் கும்பக்கரைக்கு வரத்தொடங்கியுள்ளனர்.
ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து அய்யப்ப பக்தர்கள் கும்பக்கரை அருவிக்கு வந்து செல்கின்றனர்.
அறிவிப்பு பலகை தமிழில் உள்ளதால் அவர்கள் அருவிக்கு சென்றடைவதில் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே பெரியகுளம்-மதுரை சாலையில் கும்பக்கரை பிரிவு அருகே வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகை ஆங்கிலத்திலும் இருக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X