என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நெல்லை அருகே விவசாயியை வழிமறித்து தாக்கிய 3 பேர் கைது
Byமாலை மலர்18 Nov 2017 12:05 PM GMT (Updated: 18 Nov 2017 12:05 PM GMT)
நெல்லை அருகே விவசாயியை வழிமறித்து தாக்கிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை:
நெல்லையை அடுத்த மானூர் அருகே உள்ள ஓடைக்கரையை சேர்ந்தவர் பெருமாள் (வயது 58).விவசாயி. இவர் அவரது வீட்டின் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற மூர்த்தி (23), பால்சாமி (24), முத்துக்குமார் (22) ஆகிய 3 பேர் குடிபோதையில் ரகளை செய்தபடி நின்றனர். இதை பெருமாள் கண்டித்தார். இதனால் அவர்களுக்கிடையே முன்விரோதம் இருந்தது. இந்த நிலையில் நேற்று பெருமாள் அங்குள்ள சாலையில் பைக்கில் சென்றார். அப்போது அங்கு வந்த மூர்த்தி, பால் இசக்கி, முத்துக்குமார் ஆகிய 3 பேரும் பெருமாளை வழிமறித்து தாக்கினர். அரிவாளை காட்டி கொலை மிரட்டலும் விடுத்தனர்.
இதுபற்றி பெருமாள் மானூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மூர்த்தி உள்ளிட்ட 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து அரிவாள் பறிமுதல் செய்யப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X