search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நெல்லை அருகே விவசாயியை வழிமறித்து தாக்கிய 3 பேர் கைது
    X

    நெல்லை அருகே விவசாயியை வழிமறித்து தாக்கிய 3 பேர் கைது

    நெல்லை அருகே விவசாயியை வழிமறித்து தாக்கிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெல்லை:

    நெல்லையை அடுத்த மானூர் அருகே உள்ள ஓடைக்கரையை சேர்ந்தவர் பெருமாள் (வயது 58).விவசாயி. இவர் அவரது வீட்டின் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற மூர்த்தி (23), பால்சாமி (24), முத்துக்குமார் (22) ஆகிய 3 பேர் குடிபோதையில் ரகளை செய்தபடி நின்றனர். இதை பெருமாள் கண்டித்தார். இதனால் அவர்களுக்கிடையே முன்விரோதம் இருந்தது. இந்த நிலையில் நேற்று பெருமாள் அங்குள்ள சாலையில் பைக்கில் சென்றார். அப்போது அங்கு வந்த மூர்த்தி, பால் இசக்கி, முத்துக்குமார் ஆகிய 3 பேரும் பெருமாளை வழிமறித்து தாக்கினர். அரிவாளை காட்டி கொலை மிரட்டலும் விடுத்தனர்.

    இதுபற்றி பெருமாள் மானூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மூர்த்தி உள்ளிட்ட 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து அரிவாள் பறிமுதல் செய்யப்பட்டது.

    Next Story
    ×