என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
மேட்டுப்பாளையத்தில் பஸ்- லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில் 12 பேர் படுகாயம்
மேட்டுப்பாளையம்:
ஈரோட்டில் இருந்து நீலகிரி மாவட்டம் கூடலூருக்கு இன்று அதிகாலை அரசு பஸ் புறப்பட்டது. ஊட்டி கல்லட்டியை சேர்ந்த சீனிவாசன் (வயது 43) பஸ்சை ஓட்டினார். ஊட்டி நஞ்சநாட்டை சேர்ந்த நடராஜ் கண்டக்டராக இருந்தார். பஸ்சில் 48 பயணிகள் இருந்தனர்.
அதிகாலை 4 மணி அளவில் மேட்டுப்பாளையம்- அன்னூர் சாலையில் உள்ள புது மார்க்கெட் அருகே பஸ் வந்த போது எதிரே லாரி வந்தது. எதிர்பாராதவிதமாக பஸ்சும் லாரியும் நேருக்கு நேர் மோதின.
இந்த விபத்தில் பஸ்சில் இருந்த பயணிகள் படுகாயம் அடைந்து சத்தம் போட்டனர். அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து படுகாயம் அடைந்தவர்களை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
காயம் அடைந்தவர்கள் ஈரோட்டை சேர்ந்த மோகன் ராஜ் (29), கிருஷ்ணகிரியை சேர்ந்த செல்வி (39), கீர்த்தனா (19), வடிவு (40), நஞ்சநாட்டை சேர்ந்த ராஜேந்திரன் (64), மூர்த்தி (47), அரியலூரை சேர்ந்த ஜெசிதா (30), சண்ணப்பன் (65), வயநாட்டை சேர்ந்த முருகன் (48), சிதம்பரத்தை சேர்ந்த கார்த்திகேயன் (28), நாமக்கல்லை சேர்ந்த சங்கீதா (29), கோபி (29) ஆகிய 12 பேர் என்பது தெரியவந்தது.
லாரியை ஓட்டி வந்தவர் ஊட்டியை சேர்ந்த கிருஷ்ணன் (70) என்பது தெரியவந்தது. இது குறித்து சிறுமுகை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்