என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
கும்பகோணத்தில் கத்தியை காட்டி வியாபாரிக்கு கொலை மிரட்டல் ரவுடி கைது
கும்பகோணம்:
கும்பகோணம்பேட்டை, வடக்குத் தெருவை சேர்ந்தவர் கேசவன். இவருடைய மகன் அருண் (வயது 24). இவர் கும்பகோணம் பழைய பேட்டை ரவுண்டான அருகே பழக்கடை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் நேற்று இரவு இவரது கடைக்கு ஒருவர் வந்து பழங்களை வாங்கி விட்டு பணம் தரமுடியாது என்று கூறி தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. உடனே அந்த நபர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி அருணை மிரட்டினார். மேலும் அவரை தாக்கி கொலை செய்து விடுவேன் என்று கூறினார்.
இது குறித்து அருண் கும்பகோணம் தாலுகா போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் தகராறில் ஈடுபட்டவர் மதுரை நத்தம் பகுதியை சேர்ந்த அய்யப்பன் மகன் பாண்டி என்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து தாலுகா போலீசார் பாண்டியை கைது செய்தனர். அவர் மீது மதுரை போலீஸ் நிலையங்களில் பல கொலை, கொள்ளை வழக்குகள் உள்ளன.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்