என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
மதுரையில் டாக்டர் வீட்டில் 41 பவுன்- ரூ 3 லட்சம் கொள்ளை
மதுரை:
மதுரை தல்லாகுளம் பழையநத்தம் ரோட்டில் வசிப்பவர் டாக்டர் ரவிச்சந்திரன். இவரது மனைவி டாக்டர் இந்திராணி (வயது 53). இவரது 2-வது மகள் திருமணம் விஷயமாக அனைவரும் வீட்டை பூட்டிவிட்டு கடந்த 15-ந் தேதி வெளியூர் சென்றனர்.
நேற்று அவர்கள் வீடு திரும்பிய போது முன்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த டாக்டர் தம்பதியர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவும திறந்து கிடந்தது. அதில் இருந்த பொருட்கள் சிதறிக் கிடந்தன.
இது குறித்து தல்லாகுளம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து பார்வையிட்டனர்.
பீரோவில் இருந்த 41 பவுன் தங்க நகைகள், வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ 3 லட்சம் கொள்ளை போயிருப்பதாக டாக்டர் இந்திராணி தெரிவித்தார்.
வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்டு மர்ம மனிதர்கள் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் தெரிந்த நபர்கள் யாராவது இதில் ஈடுபட்டிருக்கலாமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
வில்லாபுரம் வீரபத்திரபிள்ளை தெருவைச் சேர்ந்தவர் சுரேந்திரபிரபு (52). இவர் தெற்குவெளி வீதியில் கடை நடத்தி வருகிறார்.
சம்பவத்தன்று இரவு கடையை அடைத்துச் சென்று விட்டு மறுநாள் காலை திறக்க வந்தார்.
அப்போது பூட்டு உடைக்கப்பட்டு கடைக்குள் இருந்த ரூ. 9 ஆயிரம் திருட்டு போயிருப்பது தெரிய வந்தது.
இது குறித்த புகாரின் பேரில் தெற்குவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்