என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அன்புமணி ராமதாஸ் தாக்கல் செய்த மனுவுக்கு பதில் அளிக்கவேண்டும்: ஐகோர்ட்டு உத்தரவு
Byமாலை மலர்18 Nov 2017 4:09 AM GMT (Updated: 18 Nov 2017 4:09 AM GMT)
மணல் குவாரிகளை மூடக்கோரி அன்புமணி ராமதாஸ் தாக்கல் செய்த மனுவுக்கு பதில் அளிக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுக்கு ஐக்கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை:
சென்னை ஐகோர்ட்டில், பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘தமிழகத்தில் 2003-ம் ஆண்டு முதல் பொதுப்பணித்துறையே மணல் அள்ளி விற்பனை செய்து வருகிறது. இருப்பினும் போதுமான மணல், நியாயமான விலையில் மக்களுக்கு கிடைக்கவில்லை. இடைத்தரகர்களுடன் அதிகாரிகளும் கூட்டு சேர்ந்து கொண்டு முறைகேட்டில் ஈடுபடுவதால் மணல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன், அதிக விலைக்கும் விற்கப்பட்டு வருகிறது.
ஆற்றுப்படுகைகளில் சட்டவிரோதமாக அளவுக்கு அதிகமாக மணல் அள்ளப்படுவதால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாகக் குறைந்துள்ளது. குடிநீர் தட்டுப்பாடுடன், விவசாயமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே சட்டவிரோதமாக மணல் அள்ளுவதைத் தடுப்பதுடன், இதுவரை நடைபெற்ற முறைகேடுகள் குறித்து விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழு அமைக்கவும், ஆறுகள், நீர்நிலைகளை பாதுகாப்பதற்காக உடனடியாக அனைத்து மணல் குவாரிகளையும் மூடவும் உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கை நேற்று விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர், இந்த மனுவுக்கு மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.
பின்னர் விசாரணையை வருகிற டிசம்பர் 22-ந்தேதிக்கு தள்ளிவைத்தனர்.
சென்னை ஐகோர்ட்டில், பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘தமிழகத்தில் 2003-ம் ஆண்டு முதல் பொதுப்பணித்துறையே மணல் அள்ளி விற்பனை செய்து வருகிறது. இருப்பினும் போதுமான மணல், நியாயமான விலையில் மக்களுக்கு கிடைக்கவில்லை. இடைத்தரகர்களுடன் அதிகாரிகளும் கூட்டு சேர்ந்து கொண்டு முறைகேட்டில் ஈடுபடுவதால் மணல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன், அதிக விலைக்கும் விற்கப்பட்டு வருகிறது.
ஆற்றுப்படுகைகளில் சட்டவிரோதமாக அளவுக்கு அதிகமாக மணல் அள்ளப்படுவதால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாகக் குறைந்துள்ளது. குடிநீர் தட்டுப்பாடுடன், விவசாயமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே சட்டவிரோதமாக மணல் அள்ளுவதைத் தடுப்பதுடன், இதுவரை நடைபெற்ற முறைகேடுகள் குறித்து விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழு அமைக்கவும், ஆறுகள், நீர்நிலைகளை பாதுகாப்பதற்காக உடனடியாக அனைத்து மணல் குவாரிகளையும் மூடவும் உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கை நேற்று விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர், இந்த மனுவுக்கு மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.
பின்னர் விசாரணையை வருகிற டிசம்பர் 22-ந்தேதிக்கு தள்ளிவைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X