என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மன்னார்குடி அருகே புரோகிதர் மனைவி தீக்குளித்து தற்கொலை
Byமாலை மலர்17 Nov 2017 2:36 PM GMT (Updated: 17 Nov 2017 2:36 PM GMT)
மன்னார்குடி அருகே புரோகிதர் மனைவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். அவர் எதற்காக தற்கொலை செய்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மன்னார்குடி:
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே அசேசம் பகுதியை சேர்ந்தவர் விசுவநாத அய்யர். புரோகிதர். இவரது மனைவி லட்சுமி (வயது 66). இவர்களுக்கு குழந்தைகள் இல்லை.
இந்த நிலையில் நேற்று வழக்கம் போல் புரோகிதர் பணிக்காக விசுவநாத அய்யர் வெளியூருக்கு சென்று விட்டு மாலையில் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் குளியலறையில் லட்சுமி உடல் கருகிய நிலையில் பிணமாக கிடந்தார். இதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். உடனே இதுபற்றி மன்னார்குடி போலீசுக்கு புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஜெயந்தி விரைந்து சென்று லட்சுமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.
லட்சுமி கடந்த சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்துள்ளார். இதனால் கவனிக்க உறவினர்கள் இல்லாததால் மிகவும் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. மேலும் குழந்தையும் இல்லாததால் வேதனையில் இருந்து வந்தார். இதன் காரணமாக மனமுடைந்து அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
மேலும் லட்சுமி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதற்கான வேறெதும் காரணம் உள்ளதா? என்றும் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே அசேசம் பகுதியை சேர்ந்தவர் விசுவநாத அய்யர். புரோகிதர். இவரது மனைவி லட்சுமி (வயது 66). இவர்களுக்கு குழந்தைகள் இல்லை.
இந்த நிலையில் நேற்று வழக்கம் போல் புரோகிதர் பணிக்காக விசுவநாத அய்யர் வெளியூருக்கு சென்று விட்டு மாலையில் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் குளியலறையில் லட்சுமி உடல் கருகிய நிலையில் பிணமாக கிடந்தார். இதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். உடனே இதுபற்றி மன்னார்குடி போலீசுக்கு புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஜெயந்தி விரைந்து சென்று லட்சுமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.
லட்சுமி கடந்த சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்துள்ளார். இதனால் கவனிக்க உறவினர்கள் இல்லாததால் மிகவும் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. மேலும் குழந்தையும் இல்லாததால் வேதனையில் இருந்து வந்தார். இதன் காரணமாக மனமுடைந்து அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
மேலும் லட்சுமி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதற்கான வேறெதும் காரணம் உள்ளதா? என்றும் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X