என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
வேலூர் அருகே ஆட்டோ-பைக் மோதல்: டியூசன் சென்ற பள்ளி மாணவர் பலி
வேலூர்:
வேலூர் பாகாயம் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் ஜான் ஊரிசு பள்ளி அருகே உள்ள ஏசு அழைக்கிறார் அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வருகிறார்.இவருடைய மகன் பால்சன் (14) ஓட்டோரியில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். பலவன்சாத்து குப்பத்தில் டியூசன் சென்று வந்தார். நேற்று மாலை பள்ளி முடிந்ததும் டியூசனுக்கு சென்றார்.
இரவு 8 மணிக்கு அவரது நண்பர் ஒருவரின் பைக்கை வாங்கி கொண்டு வீட்டுக்கு புறப்பட்டார்.
பைக்கை பால்சன் ஓட்டினார். அவரது நண்பர்கள் ராகுல், சந்தோஷ் ஆகியோர் பின்னால் அமர்ந்திருந்தனர். பலவன்சாத்து குப்பம் மெயின் ரோட்டில் வந்தபோது எதிரே வந்த ஆட்டோ மீது பைக் நேருக்கு நேர் மோதியது.
பைக்கில் சென்ற மாணவர்கள் 3 பேரும் படுகாயம் அடைந்தனர். பாகாயம் போலீசார் அவர்களை மீட்டு அடுக்கம் பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி பால்சன் பரிதாபமாக இறந்தார். ராகுல், சந்தோஷ் இருவரும் சி.எம்.சி.ஆஸ்பத்திரிக்கு மாற்றபட்டனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கபடுகிறது. விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்