search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பல்லடம் அருகே இன்று காலை நூல்மில் குடோனில் தீ விபத்து
    X

    பல்லடம் அருகே இன்று காலை நூல்மில் குடோனில் தீ விபத்து

    பல்லடம் அருகே இன்று காலை நூல்மில் குடோனில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் நூல், எந்திரம், உள்ளிட்ட பொருட்கள் எரிந்து சேதமானது.

    கோவை:

    பல்லடம் அருகே உள்ள சேடபாளையத்தை சேர்ந்தவர் முத்துசாமி (52). இவர் தனது தோட்டத்தில் நூல் வைண்டிங் மில் வைத்து நடத்தி வருகிறார். இதில் சுமார் 10 பேர் தொழிலாளர்களாக வேலைப்பார்த்து வருகிறார்கள். நேற்று இரவு 10 மணியளவில் வேலை முடிந்து தொழிலாளர்கள் சென்று விட்டனர்.

    இன்று காலை 9 மணிக்கு மில் குடோனை முத்துசாமி திறந்தார். அப்போது அங்கிருந்து தீபிடித்து புகை வெளியேறியது. இது குறித்து பல்லடம் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தார். தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைக்க முயன்றனர். ஆனாலும் தீ மளமளவென கொளுந்து விட்டு எரிந்தது. இதையடுத்து குடோனின் ஒரு பக்க சுவரை இடித்து தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர்.

    இதில் நூல், எந்திரம், உள்ளிட்ட பொருட்கள் எரிந்து சேதமானது. போலீசார் தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×