என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
ஈரோடு அருகே நின்ற லாரி மீது அரசு பஸ் மோதியது: ஒருவர் பலி
ஈரோடு:
சேலத்தில் இருந்த கோவைக்கு இன்று மதியம் அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. ஈரோடு கங்காபுரம் டெக்ஸ்வேலி (ஜவுளி சந்தை) அருகே வந்த போது அந்த பகுதியில் தேசிய நெடுஞ்சாலை மத்தியில் உள்ள செடிகளுக்கு ஊழியர் ஒருவர் லாரி மூலம் தண்ணீர் பீய்ச்சி அடித்த கொண்டிருந்தார்.
அப்போது வந்த பஸ் கண்ணிமைக்கும் நேரத்தில் லாரியின் பின்புறம் பயங்கரமாக மோதியது. இதில் தண்ணீர் ஊற்றி கொண்டிருந்த ஒடிசா மாநில தொழிலாளி ரகு (வயது 40) என்பவரும் சிக்கினார்.
இதில் அவர் பஸ் சக்கரத்தில் சிக்கி நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.
மோதிய வேகத்தில் பஸ்சின் முன் பகுதியும், லாரியின் பின் பகுதியும் நொருங்கியது.
மேலும் பஸ் டிரைவர் உள்பட 15 பயணிகள் படுகாயம் அடைந்தனர். இவர்கள் சேலம், கோவையை சேர்ந்தவர்கள். உடனடியாக சம்பவ இடத்துக்கு சித்தோடு, பவானி போலீசார் விரைந்து வந்தனர்.
விபத்தில் சிக்கிய பஸ் பயணிகளை போலீசாரும் அந்த பகுதி மக்களும் மீட்டனர். ஈரோடு, பவானி ஆகிய பகுதிகளில் இருந்து 5 ஆம்புலன்சுகள் வரவழைக்கப்பட்டு அதில் காயம் அடைந்த பயணிகளை பவானி மற்றும் ஈரோடு அரசு ஆஸ்பத்திரிகளுக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் பலரது நிலைமை மோசமாக உள்ளது. இந்த விபத்து குறித்து சித்தோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த விபத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பரபரப்பும் நிலவியது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்