search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராமநாதபுரம் அருகே நர்சு-இளம்பெண் மாயம்
    X

    ராமநாதபுரம் அருகே நர்சு-இளம்பெண் மாயம்

    நர்சு-இளம்பெண் மாயமானதாக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. போலீசார் 2 பேரை தேடி வருகிறார்கள்.

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் அருகே உள்ள வன்னிக்குடியை சேர்ந்தவர் சம்சுதீன். இவரது மகள் சபீதா (வயது19). இவர் மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை பார்த்து வருகிறார்.

    ஆஸ்பத்திரி விடுதியிலேயே தங்கி பணி செய்து வந்த சபீதா சில நாட்களுக்கு முன்பு ஊருக்கு வந்தார்.

    வீட்டில் குடும்பத்தினருடன் இருந்து வந்த அவர் கடந்த 13-ந்தேதி வெளியில் சென்று வருவதாக கூறி சென்றார். அதன் பிறகு சபீதா வீடு திரும்பவில்லை.

    இதுகுறித்து ராமநாதபுரம் பஜார் போலீசில் அவரது தாயார் கலா புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சிவசக்தி வழக்குப்பதிவு செய்து மாயமான சபீதாவை தேடி வருகிறார்.

    ராமேசுவரம் புதுரோடு பகுதியைச் சேர்ந்தவர் சமயமுத்து. இவரது மகள் யமுனா (18). அந்த பகுதியில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த இவர் 13-ந் தேதிக்கு வேலைக்கு சென்றார். அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை.

    பல இடங்களில் தேடியும் யமுனா குறித்து தகவல் கிடைக்காததால் தனுஷ் கோடி போலீசில் சமய முத்து புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பிரபு வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×