search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரம்மதேசம் அருகே என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் வி‌ஷம் குடித்து தற்கொலை
    X

    பிரம்மதேசம் அருகே என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் வி‌ஷம் குடித்து தற்கொலை

    பிரம்மதேசம் அருகே என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் வயிற்று வலியினால் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
    மரக்காணம்:

    விழுப்புரம் மாவட்டம் பிரம்மதேசத்தை அடுத்த எண்டியூர் பகுதியை சேர்ந்தவர் பாலாஜி இவரது மகன் அசோக்(வயது21) இவர் விழுப்புரத்தில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.

    இந்த நிலையில் அசோக் வீட்டில் இருந்த வி‌ஷத்தை குடித்து மயங்கி விழுந்தார். வீட்டில் இருந்தவர்கள் அசோக்கை மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர் அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சையளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அசோக் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து புகாரின் பேரில் பிரம்மதேசம் சப்-இன்ஸ்பெக்டர் பாபு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில் அசோக் வயிற்று வலியினால் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

    Next Story
    ×