என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மனைவிக்கு தெரியாமல் 2-வது திருமணம் செய்த டிரைவர்: 4 பேர் மீது வழக்கு
Byமாலை மலர்15 Nov 2017 9:08 AM GMT (Updated: 15 Nov 2017 9:09 AM GMT)
கவுந்தபாடி அருகே மனைவிக்கு தெரியாமல் 2-வது திருமணம் செய்த டிரைவர், அதற்கு உடந்தையாக இருந்த தாயார் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கோபி:
கவுந்தபாடி அருகே உள்ள பொம்மன்பட்டியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 30). டிரைவர். இவருக்கும் பரிமளா (23) என்பவருக்கும் கடந்த 13-3-2009 அன்று திருமணம் நடந்தது. ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
இந்த நிலையில் முருகேசன் கேரளாவுக்கு வேலைக்கு சென்றார். அங்கு ஒரு பெண்ணுடன் அவருக்கு தொடர்பு ஏற்பட்டது. பரிமளாவுக்கு தெரியாமல் அந்த பெண்ணை அவர் திருமணம் செய்து கொண்டார்.
இதை அறிந்த பரிமளா அதிர்ச்சி அடைந்தார். இது தொடர்பாக 26-7-2017 அன்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் பரிமளா புகார் செய்தார்.
அதில், ‘‘எனது கணவர் எனக்கு தெரியாமல் 2-வது திருமணம் செய்துகொண்டார். இதற்கு அவரது தாய் மற்றும் உறவினர்கள் உடந்தையாக இருந்தனர்’’ என்று கூறி இருந்தார்.
போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் தற்போது கோபி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் காயத்ரி வழக்குப்பதிவு செய்தார்.
மனைவிக்கு தெரியாமல் 2-வது திருமணம் செய்த முருகேசன், அதற்கு உடந்தையாக இருந்த அவரது தாய் மற்றும் உறவினர்கள் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கவுந்தபாடி அருகே உள்ள பொம்மன்பட்டியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 30). டிரைவர். இவருக்கும் பரிமளா (23) என்பவருக்கும் கடந்த 13-3-2009 அன்று திருமணம் நடந்தது. ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
இந்த நிலையில் முருகேசன் கேரளாவுக்கு வேலைக்கு சென்றார். அங்கு ஒரு பெண்ணுடன் அவருக்கு தொடர்பு ஏற்பட்டது. பரிமளாவுக்கு தெரியாமல் அந்த பெண்ணை அவர் திருமணம் செய்து கொண்டார்.
இதை அறிந்த பரிமளா அதிர்ச்சி அடைந்தார். இது தொடர்பாக 26-7-2017 அன்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் பரிமளா புகார் செய்தார்.
அதில், ‘‘எனது கணவர் எனக்கு தெரியாமல் 2-வது திருமணம் செய்துகொண்டார். இதற்கு அவரது தாய் மற்றும் உறவினர்கள் உடந்தையாக இருந்தனர்’’ என்று கூறி இருந்தார்.
போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் தற்போது கோபி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் காயத்ரி வழக்குப்பதிவு செய்தார்.
மனைவிக்கு தெரியாமல் 2-வது திருமணம் செய்த முருகேசன், அதற்கு உடந்தையாக இருந்த அவரது தாய் மற்றும் உறவினர்கள் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X