என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மாணவர்கள் கைது
Byமாலை மலர்15 Nov 2017 4:54 AM GMT (Updated: 15 Nov 2017 4:54 AM GMT)
விழுப்புரம் மாவட்டம் சின்னசேலத்தில் செல்போனில் ஆபாசமாக பேசி இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி:
விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் பகுதியை சேர்ந்த 17 வயது இளம்பெண். கனியாமூர் கூட்டுரோடு பகுதியில் உள்ள ஒரு மருந்து கடையில் வேலைசெய்து வந்தார்.
கடந்த சில வாரங்களாக இவருடைய செல்போன் எண்ணை தொடர்பு கொண்ட 2 வாலிபர்கள் அவரிடம் ஆபாசமாக பேசி பாலியல் தொல்லை கொடுத்து வந்ததனர்.
இதுகுறித்து அந்த இளம்பெண் சின்னசேலம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
இதைத்தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கணபதி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணின் செல்போன் எண்ணுக்கு வந்த 2 பேரின் எண்களை வைத்து விசாரித்தனர்.
அதில் காளசமுத்திரத்தை சேர்ந்த ரஞ்சித் குமார்(வயது 19), கல்லாநத்தத்தை சேர்ந்த சதீஷ்குமார்(19) ஆகியோர் மருந்துகடையில் வேலைசெய்யும் இளம்பெண்ணை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பாலியல் தொல்லை கொடுத்து வந்தது தெரிந்தது. மேலும் அவர்கள் 2 பேரும் சின்னசேலம் அருகே உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் பி.இ. 3-ம் ஆண்டு படித்து வருவதும் தெரியவந்தது.
இதையடுத்து கல்லூரி மாணவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் பகுதியை சேர்ந்த 17 வயது இளம்பெண். கனியாமூர் கூட்டுரோடு பகுதியில் உள்ள ஒரு மருந்து கடையில் வேலைசெய்து வந்தார்.
கடந்த சில வாரங்களாக இவருடைய செல்போன் எண்ணை தொடர்பு கொண்ட 2 வாலிபர்கள் அவரிடம் ஆபாசமாக பேசி பாலியல் தொல்லை கொடுத்து வந்ததனர்.
இதுகுறித்து அந்த இளம்பெண் சின்னசேலம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
இதைத்தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கணபதி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணின் செல்போன் எண்ணுக்கு வந்த 2 பேரின் எண்களை வைத்து விசாரித்தனர்.
அதில் காளசமுத்திரத்தை சேர்ந்த ரஞ்சித் குமார்(வயது 19), கல்லாநத்தத்தை சேர்ந்த சதீஷ்குமார்(19) ஆகியோர் மருந்துகடையில் வேலைசெய்யும் இளம்பெண்ணை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பாலியல் தொல்லை கொடுத்து வந்தது தெரிந்தது. மேலும் அவர்கள் 2 பேரும் சின்னசேலம் அருகே உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் பி.இ. 3-ம் ஆண்டு படித்து வருவதும் தெரியவந்தது.
இதையடுத்து கல்லூரி மாணவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X