search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மாணவர்கள் கைது
    X

    இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மாணவர்கள் கைது

    விழுப்புரம் மாவட்டம் சின்னசேலத்தில் செல்போனில் ஆபாசமாக பேசி இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.
    கள்ளக்குறிச்சி:

    விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் பகுதியை சேர்ந்த 17 வயது இளம்பெண். கனியாமூர் கூட்டுரோடு பகுதியில் உள்ள ஒரு மருந்து கடையில் வேலைசெய்து வந்தார்.

    கடந்த சில வாரங்களாக இவருடைய செல்போன் எண்ணை தொடர்பு கொண்ட 2 வாலிபர்கள் அவரிடம் ஆபாசமாக பேசி பாலியல் தொல்லை கொடுத்து வந்ததனர்.

    இதுகுறித்து அந்த இளம்பெண் சின்னசேலம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    இதைத்தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கணபதி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணின் செல்போன் எண்ணுக்கு வந்த 2 பேரின் எண்களை வைத்து விசாரித்தனர்.

    அதில் காளசமுத்திரத்தை சேர்ந்த ரஞ்சித் குமார்(வயது 19), கல்லாநத்தத்தை சேர்ந்த சதீஷ்குமார்(19) ஆகியோர் மருந்துகடையில் வேலைசெய்யும் இளம்பெண்ணை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பாலியல் தொல்லை கொடுத்து வந்தது தெரிந்தது. மேலும் அவர்கள் 2 பேரும் சின்னசேலம் அருகே உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் பி.இ. 3-ம் ஆண்டு படித்து வருவதும் தெரியவந்தது.

    இதையடுத்து கல்லூரி மாணவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
    Next Story
    ×