search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேலூர் அருகே அரசு பஸ் மோதி வாலிபர் பலி
    X

    மேலூர் அருகே அரசு பஸ் மோதி வாலிபர் பலி

    மேலூர் அருகே அரசு பஸ் மோதி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.

    மேலூர்:

    மேலூர் அருகே உள்ள கோட்டநத்தம் பட்டியை சேர்ந்தவர் மகாதேவன். இவரது மகன் மகாராஜா (வயது 27). துபாயில் வேலை பார்த்து வந்த இவர், சில நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்தார்.

    நேற்று மாலை மகாராஜா மோட்டார் சைக்கிளில் அருகில் உள்ள கூட்டுறவுபட்டியில் வசிக்கும் அக்காவை பார்க்க சென்றார். பின்னர் மாலை அவர் ஊருக்கு புறப்பட்டார்.

    மேலூர்-சிவகங்கை ரோட்டில் கோட்டநத்தம் பட்டி அருகே சென்று கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த அரசு பஸ் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் மகாராஜா படுகாயம் அடைந்தார்.

    உயிருக்கு போராடிய அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து கீழவளவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×