search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராமேசுவரத்தில் மழைக்கு பள்ளி கட்டிடம் இடிந்தது
    X

    ராமேசுவரத்தில் மழைக்கு பள்ளி கட்டிடம் இடிந்தது

    ராமேசுவரத்தில் இரவு பெய்த மழைக்கு பள்ளி கட்டிடத்தின் முகப்பு இடிந்து விழுந்தது.

    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேசுவரம், பரமக்குடி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் நேற்று இரவு மழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இந்த மழை நீடித்தது.

    இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இரவில் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது.

    ராமேசுவரம் அருகே கம்பை கிராமத்தில் நேற்று பெய்த மழைக்கு அரசு ஆரம்பப்பள்ளியின் முகப்பு கட்டிடம் நள்ளிரவு 2 மணிக்கு திடீரென இடிந்து விழுந்தது. இரவு நேரத்தில் கட்டிடம் இடிந்ததால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

    மதுரை மாவட்டத்திலும் இன்று அதிகாலை மழை பெய்தது. மதுரை நகர் பகுதியில் பெய்த மழையின் காரணமாக தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி நின்றது.

    Next Story
    ×