என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
16 மாதங்களுக்கு பிறகு முல்லை பெரியாறு அணையில் மூவர் குழு ஆய்வு
Byமாலை மலர்14 Nov 2017 7:22 AM GMT (Updated: 14 Nov 2017 7:22 AM GMT)
முல்லைப் பெரியாறு அணையில் 16 மாதங்களுக்கு பிறகு மூவர் குழு இன்று ஆய்வு மேற்கொண்டனர்.
கூடலூர்:
முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 152 அடியாக உயர்த்த பேபி அணையை பலப்படுத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து அணை மராமத்து மற்றும் கண்காணிப்பு பணிக்காக உச்சநீதிமன்ற உத்தரவின் படி மூவர் குழு அமைக்கப்பட்டது.
இக்குழுவின் தலைவராக மத்திய நீர்வள ஆணையத்தின் தலைமைப் பொறியாளர் நாதன் நியமிக்கப்பட்டார். இவர் கடந்த 1 வருடத்துக்கு முன்பு ஓய்வு பெற்றார். இதனையடுத்து மத்திய நீர் வள ஆணையத்தின் அணைகள் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு குழுவின் முதன்மை பொறியாளர் பி.ஆர்.கே.பிள்ளை புதிய தலைவராக நியமிக்கப்பட்டார்.
இக்குழுவில் தமிழக மற்றும் கேரள அதிகாரிகளும் இடம்பெற்றுள்ளனர். பி.ஆர்.கே பிள்ளை தலைமையில் கடந்த ஆண்டு ஆய்வு கூட்டம் நடைபெற்ற நிலையில் அவரும் பணி ஓய்வு பெற்றார்.
மூவர் குழுவின் புதிய தலைவராக மத்திய நீர் வள ஆணையத்தின் தலைமைப் பொறியாளர் குன்சன்ராஜ் நியமிக்கப்பட்டார். இதே போல் தமிழக பிரதிநிதியாக இருந்த பழனியப்பனுக்கு பதிலாக பொதுப்பணித்துறை முதன்மை செயலர் பிரபாகரன் நியமிக்கப்பட்டார்.
கேரள பிரதிநிதியாக இருந்த அம்மாநில நீர் பாசன துறை கூடுதல் செயலர் குரியன் மாற்றப்பட்டு கேரள நீர் வள ஆதார அமைப்பின் செயலர் டிங்கு பிஜ்வால் நியமிக்கப்பட்டுள்ளார். இக்குழு 16 மாதங்களுக்கு பிறகு முல்லைப் பெரியாறு அணையில் இன்று ஆய்வு மேற்கொண்டனர்.
மூவர் குழு வருகையையொட்டி அணை பகுதியில் வர்ணம் பூசுதல், ஷட்டரில் பிளேட் பொருத்துதல், பேபி அணையில் இருந்து பெரியாறு அணை வரை கல் பதித்தல் போன்ற பணிகள் நடைபெற்றன.
மூவர் குழு பேபி அணை, ஷட்டர் பகுதி, நீர் இருப்பு, வரத்து, கசிவு உள்ளிட்ட பல்வேறு ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டனர். தமிழக விவசாயிகள் சார்பில் வைக்கப்பட்டுள்ள பல்வேறு கோரிக்கைகளுக்கு இன்று தீர்வு கிடைக்கும் என்று விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.
குறிப்பாக முல்லைப் பெரியாறு அணை பகுதிக்கு மின்சாரம் வழங்குதல், நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தமிழக படகினை இயக்க அனுமதி, வள்ளக்கடவு வழியாக பொருட்கள் கொண்டு செல்ல கெடுபிடி செய்யும் வனத்துறையினரின் எதிர்ப்புக்கு முற்றுப்புள்ளி என பலதரப்பட்ட பிரச்சனைகளுக்கு மூவர் குழு உரிய தீர்வு காணும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அணையில் ஆய்வு மேற்கொண்ட பிறகு இன்று மாலையில் மூவர் குழு பிரதிநிதிகள் மற்றும் தமிழக, கேரள அதிகாரிகள் கலந்து கொள்ளும் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. அதில் தமிழகத்தின் சார்பில் உள்ள கோரிக்கைகள் எடுத்துரைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 152 அடியாக உயர்த்த பேபி அணையை பலப்படுத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து அணை மராமத்து மற்றும் கண்காணிப்பு பணிக்காக உச்சநீதிமன்ற உத்தரவின் படி மூவர் குழு அமைக்கப்பட்டது.
இக்குழுவின் தலைவராக மத்திய நீர்வள ஆணையத்தின் தலைமைப் பொறியாளர் நாதன் நியமிக்கப்பட்டார். இவர் கடந்த 1 வருடத்துக்கு முன்பு ஓய்வு பெற்றார். இதனையடுத்து மத்திய நீர் வள ஆணையத்தின் அணைகள் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு குழுவின் முதன்மை பொறியாளர் பி.ஆர்.கே.பிள்ளை புதிய தலைவராக நியமிக்கப்பட்டார்.
இக்குழுவில் தமிழக மற்றும் கேரள அதிகாரிகளும் இடம்பெற்றுள்ளனர். பி.ஆர்.கே பிள்ளை தலைமையில் கடந்த ஆண்டு ஆய்வு கூட்டம் நடைபெற்ற நிலையில் அவரும் பணி ஓய்வு பெற்றார்.
மூவர் குழுவின் புதிய தலைவராக மத்திய நீர் வள ஆணையத்தின் தலைமைப் பொறியாளர் குன்சன்ராஜ் நியமிக்கப்பட்டார். இதே போல் தமிழக பிரதிநிதியாக இருந்த பழனியப்பனுக்கு பதிலாக பொதுப்பணித்துறை முதன்மை செயலர் பிரபாகரன் நியமிக்கப்பட்டார்.
கேரள பிரதிநிதியாக இருந்த அம்மாநில நீர் பாசன துறை கூடுதல் செயலர் குரியன் மாற்றப்பட்டு கேரள நீர் வள ஆதார அமைப்பின் செயலர் டிங்கு பிஜ்வால் நியமிக்கப்பட்டுள்ளார். இக்குழு 16 மாதங்களுக்கு பிறகு முல்லைப் பெரியாறு அணையில் இன்று ஆய்வு மேற்கொண்டனர்.
மூவர் குழு வருகையையொட்டி அணை பகுதியில் வர்ணம் பூசுதல், ஷட்டரில் பிளேட் பொருத்துதல், பேபி அணையில் இருந்து பெரியாறு அணை வரை கல் பதித்தல் போன்ற பணிகள் நடைபெற்றன.
மூவர் குழு பேபி அணை, ஷட்டர் பகுதி, நீர் இருப்பு, வரத்து, கசிவு உள்ளிட்ட பல்வேறு ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டனர். தமிழக விவசாயிகள் சார்பில் வைக்கப்பட்டுள்ள பல்வேறு கோரிக்கைகளுக்கு இன்று தீர்வு கிடைக்கும் என்று விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.
குறிப்பாக முல்லைப் பெரியாறு அணை பகுதிக்கு மின்சாரம் வழங்குதல், நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தமிழக படகினை இயக்க அனுமதி, வள்ளக்கடவு வழியாக பொருட்கள் கொண்டு செல்ல கெடுபிடி செய்யும் வனத்துறையினரின் எதிர்ப்புக்கு முற்றுப்புள்ளி என பலதரப்பட்ட பிரச்சனைகளுக்கு மூவர் குழு உரிய தீர்வு காணும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அணையில் ஆய்வு மேற்கொண்ட பிறகு இன்று மாலையில் மூவர் குழு பிரதிநிதிகள் மற்றும் தமிழக, கேரள அதிகாரிகள் கலந்து கொள்ளும் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. அதில் தமிழகத்தின் சார்பில் உள்ள கோரிக்கைகள் எடுத்துரைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X