என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருக்காட்டுப்பள்ளி அருகே பள்ளி வகுப்பறையில் பிளஸ்-2 மாணவர் தற்கொலை
Byமாலை மலர்14 Nov 2017 6:41 AM GMT (Updated: 14 Nov 2017 6:41 AM GMT)
தஞ்சை மாவட்டம் திருக்காட்டுபள்ளி அருகே இன்று காலை பள்ளி வகுப்பறையில் பிளஸ்-2 மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பூதலூர்:
தஞ்சை மாவட்டம் திருக்காட்டுபள்ளி அருகே உள்ள நடுபடுகை கிராமத்தை சேர்நதவர் சரவணகுமார். விவசாயி. இவரது மனைவி அங்கேஸ்வரி. இவர்களது மகன்கள் சதீஷ்பாபு (வயது 17), சந்தோஷ்பாபு(11).
இவர்கள் 2 பேரும் திருக்காட்டுப்பள்ளி அடுத்த பழமார்நேரியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர். இதில் சதீஷ்பாபு பிளஸ்-2வும், சந்தோஷ் பாபு 6-ம் வகுப்பும் படித்து வந்தனர்.
இந்த நிலையில் பள்ளியில் சிறப்பு வகுப்புக்காக இன்று காலை 8 மணியளவில் மாணவர் சதீஷ்பாபு வந்தார். அங்கு சிறப்பு வகுப்பில் மற்ற மாணவர்களுடன் சதீஷ்பாபு கலந்து கொண்டார்.
பின்னர் சிறிதுநேரம் கழித்து சதீஷ்பாபு அங்குள்ள ஒரு வகுப்பறைக்கு சென்றார். திடீரென வகுப்பறையில் இருந்த ஒரு கொக்கியில் கயிற்றால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதற்கிடையே சதீஷ்பாபு நீண்டநேரமாக காணாததால் அவரை மற்ற மாணவர்கள் தேடினர். அப்போது வகுப்பறையில் சென்று பார்த்த போது தூக்கில் தொங்கியப்படி சதீஷ்பாபு பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுபற்றி மாணவர்கள் பள்ளி ஆசிரியர்களிடம் தகவல் கொடுத்தனர். அவர்களும் வந்து பார்த்து மாணவர் தற்கொலை குறித்து திருக்காட்டுப்பள்ளி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், திருவையாறு போலீஸ் டி.எஸ்.பி. அன்பழகன், திருக்காட்டுப்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனிமுத்து ஆகியோர் விரைந்து சென்று மாணவர் சதீஷ்பாபு உடலை மீட்டு விசாரணை நடத்தினர். மாணவர் உடலை பிரேத பரிசோதனைக்காக திருக்காட்டுப்பள்ளி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மாணவர் சதீஷ்பாபு எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்பது பற்றி போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.
வகுப்பறையில் மாணவர் தற்கொலை செய்த சம்பவம் திருக்காட்டுப்பள்ளி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சை மாவட்டம் திருக்காட்டுபள்ளி அருகே உள்ள நடுபடுகை கிராமத்தை சேர்நதவர் சரவணகுமார். விவசாயி. இவரது மனைவி அங்கேஸ்வரி. இவர்களது மகன்கள் சதீஷ்பாபு (வயது 17), சந்தோஷ்பாபு(11).
இவர்கள் 2 பேரும் திருக்காட்டுப்பள்ளி அடுத்த பழமார்நேரியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர். இதில் சதீஷ்பாபு பிளஸ்-2வும், சந்தோஷ் பாபு 6-ம் வகுப்பும் படித்து வந்தனர்.
இந்த நிலையில் பள்ளியில் சிறப்பு வகுப்புக்காக இன்று காலை 8 மணியளவில் மாணவர் சதீஷ்பாபு வந்தார். அங்கு சிறப்பு வகுப்பில் மற்ற மாணவர்களுடன் சதீஷ்பாபு கலந்து கொண்டார்.
பின்னர் சிறிதுநேரம் கழித்து சதீஷ்பாபு அங்குள்ள ஒரு வகுப்பறைக்கு சென்றார். திடீரென வகுப்பறையில் இருந்த ஒரு கொக்கியில் கயிற்றால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மாணவர் சதீஷ்பாபு
இதற்கிடையே சதீஷ்பாபு நீண்டநேரமாக காணாததால் அவரை மற்ற மாணவர்கள் தேடினர். அப்போது வகுப்பறையில் சென்று பார்த்த போது தூக்கில் தொங்கியப்படி சதீஷ்பாபு பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுபற்றி மாணவர்கள் பள்ளி ஆசிரியர்களிடம் தகவல் கொடுத்தனர். அவர்களும் வந்து பார்த்து மாணவர் தற்கொலை குறித்து திருக்காட்டுப்பள்ளி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், திருவையாறு போலீஸ் டி.எஸ்.பி. அன்பழகன், திருக்காட்டுப்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனிமுத்து ஆகியோர் விரைந்து சென்று மாணவர் சதீஷ்பாபு உடலை மீட்டு விசாரணை நடத்தினர். மாணவர் உடலை பிரேத பரிசோதனைக்காக திருக்காட்டுப்பள்ளி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மாணவர் சதீஷ்பாபு எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்பது பற்றி போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.
வகுப்பறையில் மாணவர் தற்கொலை செய்த சம்பவம் திருக்காட்டுப்பள்ளி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X