என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இன்று குழந்தைகள் தினம்: ஜவகர்லால் நேரு சிலைக்கு தமிழக ஆளுநர்-ஓ.பி.எஸ். மரியாதை
Byமாலை மலர்14 Nov 2017 4:45 AM GMT (Updated: 14 Nov 2017 4:45 AM GMT)
ஜவகர்லால் நேருவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு தமிழக ஆளுநர் மற்றும் தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.
புதுடெல்லி:
முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேருவின் 128-வது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நேருவின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. ஆங்காங்கே நேருவின் உருவப்படங்கள் அலங்கரித்து வைக்கப்பட்டும் மரியாதை செலுத்தப்படுகிறது.
பண்டிட் ஜவகர்லால் நேருவின் பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துவதாக பிரதமர் மோடி டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
சென்னை கிண்டி கத்திப்பாராவில் உள்ள நேரு சிலைக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மரியாதை செலுத்தினார். நேரு சிலைக்கு கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள திருவுருவப்படத்திற்கு ஆளுநர் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதேபோல் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், மாபா பாண்டியராஜன், பெஞ்சமின் உள்ளிட்டோரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
குழந்தைகள் தினமான இன்று சென்னை அரசு அருங்காட்சியகத்தில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு ஓவியப்போட்டி, பேச்சுப்போட்டி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படுகின்றன.
முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேருவின் 128-வது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நேருவின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. ஆங்காங்கே நேருவின் உருவப்படங்கள் அலங்கரித்து வைக்கப்பட்டும் மரியாதை செலுத்தப்படுகிறது.
பண்டிட் ஜவகர்லால் நேருவின் பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துவதாக பிரதமர் மோடி டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
சென்னை கிண்டி கத்திப்பாராவில் உள்ள நேரு சிலைக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மரியாதை செலுத்தினார். நேரு சிலைக்கு கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள திருவுருவப்படத்திற்கு ஆளுநர் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதேபோல் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், மாபா பாண்டியராஜன், பெஞ்சமின் உள்ளிட்டோரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
குழந்தைகள் தினமான இன்று சென்னை அரசு அருங்காட்சியகத்தில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு ஓவியப்போட்டி, பேச்சுப்போட்டி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படுகின்றன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X