என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஒருதலைக் காதலால் இளம்பெண் எரித்துக்கொலை: வாலிபர் தலைமறைவு
Byமாலை மலர்14 Nov 2017 4:15 AM GMT (Updated: 14 Nov 2017 6:03 AM GMT)
சென்னை ஆதம்பாக்கத்தில் ஒருதலைக்காதல் காரணமாக இளம்பெண் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னை:
சென்னை ஆதம்பாக்கம் ஏ.ஜி.எஸ். காலனியைச் சேர்ந்தவர் இந்துஜா. அவரை ஆகாஷ் என்ற வாலிபர் ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். அவரது காதலை இந்துஜா ஏற்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் கடும் கோபத்தில் இருந்த ஆகாஷ், இந்துஜாவை பழிவாங்க நினைத்ததாகவும் தெரிகிறது.
இந்நிலையில் நேற்று இரவு ஆகாஷ் இந்துஜாவின் வீட்டிற்கு வந்துள்ளார். அங்கு இந்துஜா, அவரது தாய் ரேணுகா, தங்கை நிவேதிதா ஆகியோர் இருந்துள்ளனர். திடீரென தான் வைத்திருந்த பெட்ரோலை அவர்கள் மீது ஊற்றிய ஆகாஷ், தீ வைத்துவிட்டு அந்த இடத்தில் இருந்து தப்பி ஓடியுள்ளார்.
இதனால் இந்துஜா, அவரது தாயார் ரேணுகா, சகோதரி நிவேதிதா ஆகியோர் பலத்த தீக்காயம் அடைந்தனர். அவர்கள் மூவரும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி இந்துஜா இறந்துபோனார். மற்ற இருவருக்கும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான ஆகாஷை தேடி வருகின்றனர்.
சென்னை ஆதம்பாக்கம் ஏ.ஜி.எஸ். காலனியைச் சேர்ந்தவர் இந்துஜா. அவரை ஆகாஷ் என்ற வாலிபர் ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். அவரது காதலை இந்துஜா ஏற்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் கடும் கோபத்தில் இருந்த ஆகாஷ், இந்துஜாவை பழிவாங்க நினைத்ததாகவும் தெரிகிறது.
இந்நிலையில் நேற்று இரவு ஆகாஷ் இந்துஜாவின் வீட்டிற்கு வந்துள்ளார். அங்கு இந்துஜா, அவரது தாய் ரேணுகா, தங்கை நிவேதிதா ஆகியோர் இருந்துள்ளனர். திடீரென தான் வைத்திருந்த பெட்ரோலை அவர்கள் மீது ஊற்றிய ஆகாஷ், தீ வைத்துவிட்டு அந்த இடத்தில் இருந்து தப்பி ஓடியுள்ளார்.
இதனால் இந்துஜா, அவரது தாயார் ரேணுகா, சகோதரி நிவேதிதா ஆகியோர் பலத்த தீக்காயம் அடைந்தனர். அவர்கள் மூவரும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி இந்துஜா இறந்துபோனார். மற்ற இருவருக்கும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான ஆகாஷை தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X