search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சங்கராபுரம் பகுதிகளில் மோட்டார் சைக்கிள் திருடிய 2 வாலிபர்கள் கைது
    X

    சங்கராபுரம் பகுதிகளில் மோட்டார் சைக்கிள் திருடிய 2 வாலிபர்கள் கைது

    சங்கராபுரம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார் சைக்கிள் திருடிய 2 வாலிபர்களை கைது செய்து அவர்களிடம் இருந்து 9 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.
    சங்கராபுரம்:

    விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அடுத்த மையிலாம் பாறையில் சங்கராபுரம் போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த 2 வாலிபர்களை நிறுத்தினர். அவர்கள் நிறுத்தாமல் அதிவேகமாக சென்றனர். உடனே போலீசார் அவர்களை துரத்தி சென்று மடக்கி பிடித்து விசாரித்தனர்.

    அப்போது அவர்கள் பல்வேறு இடங்களில் மோட்டார் சைக்கிள்களை திருடியது தெரியதும், அவர்கள் சங்கராபுரத்தை அடுத்த சே‌ஷசமுத்திரத்தை சேர்ந்த செல்வகுமார் (22), பாண்டியன் (24) ஆகியோர் என்றும் தெரியவந்தது.

    2 பேரையும் இன்ஸ் பெக்டர் ராஜகுமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆனந்தராசு, அன்பரசு, ஏட்டுகள் ரவி, ராஜன்பாபு ஆகியோர் தீவிர விசாரணை நடத்தினர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் 9 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.
    Next Story
    ×