search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஸ்ரீமுஷ்ணத்தில் கல்லூரி மாணவி மாயம்: தந்தை போலீசில் புகார்
    X

    ஸ்ரீமுஷ்ணத்தில் கல்லூரி மாணவி மாயம்: தந்தை போலீசில் புகார்

    ஸ்ரீமுஷ்ணத்தில் கல்லூரிக்கு சென்ற மாணவி மாயமானது குறித்து அவரது தந்தை போலீசில் புகார் செய்தார். போலீசார் மாணவியை தேடி வருகிறார்கள்.

    ஸ்ரீமுஷ்ணம்:

    கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பழனியாண் டவர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் வைத்தியநாதன். இவரது மகள் அம்சவேணி (வயது 17). இவர் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

    இவர் கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியே சென்றார். ஆனால் மாலையில் வீடு திரும்பவில்லை.

    அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் பல இடங்களில் அம்ச வேணியை தேடினர். எங்கும் அவர் இல்லை.

    இது குறித்து ஸ்ரீமுஷ்ணம் போலீஸ் நிலையத்தில் அம்சவேணியின் தந்தை வைத்தியநாதன் புகார் செய்தார். அதில் எனது மகளை ஸ்ரீமுஷ்ணத்தை சேர்ந்த மணிகண்டன் (21) என்பவர் கடத்தி சென்றுள்ளார் என்று கூறியுள்ளார்.

    இதையடுத்து சப்- இன்ஸ்பெக்டர் தனசேகரன் வழக்குப்பதிவு செய்து மாயமான அம்சவேணியை தேடிவருகின்றனர்.

    Next Story
    ×