என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
குத்தாலத்தில் கந்துவட்டி கேட்டு கொலை மிரட்டல் விடுத்த பெண் கைது
குத்தாலம்:
குத்தாலம் தாலுகா ராஜகோபாலபுரம் பகுதி கீழமாந்தோப்பு தெருவை சேர்ந்தவர் தர்மராஜ். தொழிலாளி. இவரது மனைவி சுமதி(52). குத்தாலம் மெயின்ரோடு பகுதி மேலசாலையை சேர்ந்தவர் சுப்பிரமணியன் மனைவி மீனாம்பாள்(48). அப்பகுதியில் பித்தளை பாத்திரக்கடை வைத்துள்ளார்.
இவரிடம் சுமதி கடந்த ஆண்டு ரூ.1 லட்சத்தை வட்டிக்கு வாங்கியுள்ளார். இந்நிலையில் கடந்த 4 மாதமாக அவர் வட்டி கட்டவில்லையாம். இதனால் சுமதி வீட்டுக்கு சென்ற மீனாம்பாள் வட்டியுடன் பணத்தை திருப்பிக் கேட்டு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அவர் குத்தாலம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சுகுணா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மீனாம்பாளை கைது செய்து விசாரித்தனர். இதில் அவர் அதேபகுதியை சேர்ந்த பலருக்கும் வட்டிக்கும், பித்தளை பாத்திரங்கள் வாங்க கடனுக்கும் பத்திரம் எழுதி வாங்கி மிரட்டி வந்தது தெரியவந்தது.
அதேபகுதியை சேர்ந்த அன்னக்கிளி ரூ.30 ஆயிரம், மாலா ரூ.3 லட்சம், மாரியப்பன் ரூ.1 லட்சம், அமுதா ரூ.30 ஆயிரம், உதயபானு ரூ.30 ஆயிரம், அழகேஸ்வரி ரூ.2 லட்சம் என பலரிடமும் மீனாம்பாள் கடனுக்கு பணம் கொடுத்து விட்டு கந்துவட்டி வசூலித்து வந்துள்ளது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்