search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இரும்பு குடோனில் மின்சாரம் தாக்கி வாலிபர் பலி
    X

    இரும்பு குடோனில் மின்சாரம் தாக்கி வாலிபர் பலி

    இரும்பு குடோனில் மின்சாரம் தாக்கி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவொற்றியூர்:

    மணலியை அடுத்த சடையன் குப்பம் பர்மா நகரில் இரும்பு குடோன் உள்ளது. இங்கு தூத்துக்குடியை சேர்ந்த ராஜ்குமார் (வயது 23) தங்கி வேலை பார்த்து வந்தார்.

    நேற்று இரவு அவர் அங்கு வைக்கப்பட்டிருந்த கேனில் தண்ணீர் குடிக்க சென்றார். அப்போது மின்வயரில் கசிவு ஏற்பட்டு அருகில் கிடந்த இரும்பு கம்பிகளில் மின்சாரம் பாய்ந்து இருந்தது.

    இதனை அறியாமல் ராஜ்குமார் இரும்பு கம்பியில் கை வைத்தார். இதில் அவர் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து சாத்தாங்காடு போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    Next Story
    ×