search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிவகங்கையில் மோட்டார் சைக்கிள் விபத்தில் ஓட்டல் ஊழியர் பலி
    X

    சிவகங்கையில் மோட்டார் சைக்கிள் விபத்தில் ஓட்டல் ஊழியர் பலி

    சிவகங்கையில் மோட்டார் சைக்கிள் விபத்தில் ஓட்டல் ஊழியர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிவகங்கை:

    சிவகங்கையில் உள்ள பெரியார் நகர், சி.பி. காலனியைச் சேர்ந்தவர் நீதிமான் (வயது 40). இவர் வாரச்சந்தை ரோட்டில் உள்ள ஓட்டலில் சூப்பர்வைசராக பணியாற்றி வந்தார்.

    நேற்று இரவு வேலையை முடித்துவிட்டு நீதிமான் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டார். வீட்டின் அருகே வந்தபோது அங்கு ஏற்கனவே தோண்டப்பட்டிருந்த பாதாள சாக்கடை பள்ளத்தில் சிக்கி மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானது.

    இதில் கீழே விழுந்த நீதிமானுக்கு முகத்திலும், தலையிலும் பலத்த காயம் ஏற்பட்டது. ஆபத்தான நிலையில் சிவகங்கை அரசு ஆஸ்பத்திரிக்கு நீதிமான் கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை அவர் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து சிவகங்கை டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×