search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சேலத்தில் பிளஸ்-1 மாணவி தற்கொலை முயற்சி
    X

    சேலத்தில் பிளஸ்-1 மாணவி தற்கொலை முயற்சி

    சேலத்தில் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த பிளஸ்-1 மாணவி சாணி பவுடரை கரைத்து குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    சேலம்:

    சேலம், சூரமங்கலம் அருகே உள்ள சோளம்பள்ளம் பகுதியில் வசித்து வரும் மாணவி ஒருவர் அந்த பகுதியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் இன்று காலை வீட்டில் மாணவி சாணி பவுடரை கரைத்து குடித்து மயங்கி கிடந்தார்.

    இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவருடைய குடும்பத்தினர் உடனடியாக மீட்டு, வாகனத்தில் ஏற்றிக் கொண்டு வந்து சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு மாணவிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த சம்பவம் குறித்து சூரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கையில், மாணவிக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு வரும் என்றும், வழக்கமாக இன்று காலை வயிற்று வலி வந்ததாகவும், இதனால் மனம் உடைந்து அவர் சாணி பவுடரை கரைத்து குடித்ததும் தெரியவந்தது.

    Next Story
    ×