என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சேலத்தில் பிளஸ்-1 மாணவி தற்கொலை முயற்சி
Byமாலை மலர்9 Nov 2017 5:22 PM GMT (Updated: 9 Nov 2017 5:23 PM GMT)
சேலத்தில் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த பிளஸ்-1 மாணவி சாணி பவுடரை கரைத்து குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம்:
சேலம், சூரமங்கலம் அருகே உள்ள சோளம்பள்ளம் பகுதியில் வசித்து வரும் மாணவி ஒருவர் அந்த பகுதியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் இன்று காலை வீட்டில் மாணவி சாணி பவுடரை கரைத்து குடித்து மயங்கி கிடந்தார்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவருடைய குடும்பத்தினர் உடனடியாக மீட்டு, வாகனத்தில் ஏற்றிக் கொண்டு வந்து சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு மாணவிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து சூரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கையில், மாணவிக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு வரும் என்றும், வழக்கமாக இன்று காலை வயிற்று வலி வந்ததாகவும், இதனால் மனம் உடைந்து அவர் சாணி பவுடரை கரைத்து குடித்ததும் தெரியவந்தது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X