search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கவுந்தப்பாடி அருகே விபத்து: ஓடும் லாரியில் இருந்து 3 பேர் கீழே விழுந்தனர் - ஒருவர் பலி
    X

    கவுந்தப்பாடி அருகே விபத்து: ஓடும் லாரியில் இருந்து 3 பேர் கீழே விழுந்தனர் - ஒருவர் பலி

    கவுந்தப்பாடியில் வேகத்தடையில் ஏறி இறங்கிய போது லாரியில் நின்று கொண்டிருந்த 3 பேர் கீழே விழுந்ததில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
    ஆப்பக்கூடல்:

    கவுந்தப்பாடி அருகே உள்ள பி.மேட்டுபாளையத்தை சேர்ந்தவர்கள் மினிசாமி (வயது 53). பாட்டப்பன் (65). ராமசாமி (56). இவர்கள் 3 பேரும் கரும்பு வெட்டும் கூலி தொழிலாளர்கள்.

    இவர்கள் ஒவ்வொரு ஊர்களுக்கு சென்று கரும்பு வெட்டும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள். இதேபோல் இவர்கள் 3 பேரும் பி.மேட்டுபாளையத்திலிருந்து ஆப்பக்கூடலுக்கு கரும்பு வெட்டுவதற்காக ஒரு லாரியில் சென்று கொண்டிருந்தனர்.

    லாரியின் பின்புறம் நின்று கொண்டு சென்றனர். பெருந்தலையூர் பாலம் அருகே சென்ற போது ஒரு வேகத்தடையில் அந்த லாரி வேகமாக ஏறி இறங்கியது.

    இதில் லாரியின் பின்புறம் நின்று கொண்டிருந்த 3 பேரும் நிலை தடுமாறி ஓடும் லாரியிலிருந்து கீழே விழுந்தனர். 3 பேரும் படுகாயம் அடைந்தனர். உடனடியாக அவர்களை கவுந்தப்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பிறகு ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி மினிசாமி பரிதாபமாக இறந்தார். மற்ற 2 பேருக்கும் தீவிர கிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து கவுந்தப்பாடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×