என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வருமான வரி சோதனை மத்திய அரசின் பழிவாங்கும் நடவடிக்கை: ஆர்.எஸ்.பாரதி எம்.பி.
Byமாலை மலர்9 Nov 2017 9:38 AM GMT (Updated: 9 Nov 2017 9:38 AM GMT)
தமிழகத்தில் நடந்து வரும் வருமானவரிச் சோதனை எதற்காக நடந்து வருகிறது என மத்தியஅரசால் விளக்கம் தரப்படவில்லை. இது மத்திய அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார்.
நெல்லை:
தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி. நெல்லையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
தற்போது தமிழகத்தில் நடந்து வரும் வருமானவரிச் சோதனை எதற்காக நடந்து வருகிறது என மத்தியஅரசால் விளக்கம் தரப்படவில்லை. இது மத்தியஅரசின் பழிவாங்கும் நடவடிக்கையாகும்.
தமிழகத்தில் இதுவரை நடந்த வருமானவரிச் சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை வைத்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மத்தியஅரசு தமிழகத்தை கிள்ளுக்கீரையாக எண்ணுகிறது.
அ.தி.மு.க. ஆட்சியின் போது பல ஊழல்கள் நடந்துள்ளது. ஜெயலலிதாவிற்கு சொந்தமான கொடநாடு, சிறுதாவூர் பங்களாக்களிலும் வருமானவரிச்சோதனை நடத்த வேண்டும் என மக்களும், அ.தி.மு.க.தொண்டர்களும் விரும்புகிறார்கள்.
கடந்த 1 ஆண்டாகத்தான் இதுபோன்ற சோதனைகள் அதிக அளவில் நடக்கிறது. தமிழக அமைச்சர்கள் கோட்டைக்கு சென்று கோப்புகளை பார்ப்பதில்லை. நாட்டைபற்றி அவர்கள் சிந்திக்கவும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி. நெல்லையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
தற்போது தமிழகத்தில் நடந்து வரும் வருமானவரிச் சோதனை எதற்காக நடந்து வருகிறது என மத்தியஅரசால் விளக்கம் தரப்படவில்லை. இது மத்தியஅரசின் பழிவாங்கும் நடவடிக்கையாகும்.
தமிழகத்தில் இதுவரை நடந்த வருமானவரிச் சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை வைத்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மத்தியஅரசு தமிழகத்தை கிள்ளுக்கீரையாக எண்ணுகிறது.
அ.தி.மு.க. ஆட்சியின் போது பல ஊழல்கள் நடந்துள்ளது. ஜெயலலிதாவிற்கு சொந்தமான கொடநாடு, சிறுதாவூர் பங்களாக்களிலும் வருமானவரிச்சோதனை நடத்த வேண்டும் என மக்களும், அ.தி.மு.க.தொண்டர்களும் விரும்புகிறார்கள்.
கடந்த 1 ஆண்டாகத்தான் இதுபோன்ற சோதனைகள் அதிக அளவில் நடக்கிறது. தமிழக அமைச்சர்கள் கோட்டைக்கு சென்று கோப்புகளை பார்ப்பதில்லை. நாட்டைபற்றி அவர்கள் சிந்திக்கவும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X