என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆலங்குடி அருகே மரத்தில் கார் மோதி டிரைவர் உட்பட 5 பேர் காயம்
Byமாலை மலர்8 Nov 2017 12:46 PM GMT (Updated: 8 Nov 2017 12:46 PM GMT)
ஆலங்குடி அருகே புளிய மரத்தில் கார் மோதிய விபத்தில் டிரைவர் உட்பட 5 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
திருவரங்குளம்:
கொத்தமங்கலத்தை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 33), இவர் அதே பகுதியில் ஓட்டல் வைத்து நடத்தி வருகிறார். இவரது தந்தைக்கு கடந்த சில நாட்களாக உடல் நிலை சரியில்லை. இதனால் தஞ்சையில் உள்ள ஒரு மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தனது தந்தையை பார்ப்பதற்காக கொத்தமங்கலத்தில் இருந்து, தனது கடையில் பணிபுரியும் நடராஜன் (45), உறவினர்கள் விஜயகுமார் (45), வடகாடு சக்கரவர்த்தி (55) ஆகியோருடன் ஒரு காரில் கிளம்பினார். காரை டிரைவர் செல்வக்குமார் (27) ஓட்டி சென்றார். தஞ்சை சென்றுவிட்டு பின்னர் அங்கிருந்து இரவு நள்ளிரவில் திரும்பினர்.
கார் திருவரங்குளம் அருகே ஆலங்குடி புதுக் கோட்டை சாலையில் வந்த போது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தறிகெட்டு ஓடியது. பின்னர் சாலையின் ஓரத்தில் இருந்த புளியமரத்தில் மோதி நின்றது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த நடராஜன், சக்கரவர்த்தி உட்பட அனைவருக்கும் காயம் ஏற்பட்டது.
பின்னர் அனைவரும் அருகில் உள்ள மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இது குறித்து ஆலங்குடி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொத்தமங்கலத்தை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 33), இவர் அதே பகுதியில் ஓட்டல் வைத்து நடத்தி வருகிறார். இவரது தந்தைக்கு கடந்த சில நாட்களாக உடல் நிலை சரியில்லை. இதனால் தஞ்சையில் உள்ள ஒரு மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தனது தந்தையை பார்ப்பதற்காக கொத்தமங்கலத்தில் இருந்து, தனது கடையில் பணிபுரியும் நடராஜன் (45), உறவினர்கள் விஜயகுமார் (45), வடகாடு சக்கரவர்த்தி (55) ஆகியோருடன் ஒரு காரில் கிளம்பினார். காரை டிரைவர் செல்வக்குமார் (27) ஓட்டி சென்றார். தஞ்சை சென்றுவிட்டு பின்னர் அங்கிருந்து இரவு நள்ளிரவில் திரும்பினர்.
கார் திருவரங்குளம் அருகே ஆலங்குடி புதுக் கோட்டை சாலையில் வந்த போது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தறிகெட்டு ஓடியது. பின்னர் சாலையின் ஓரத்தில் இருந்த புளியமரத்தில் மோதி நின்றது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த நடராஜன், சக்கரவர்த்தி உட்பட அனைவருக்கும் காயம் ஏற்பட்டது.
பின்னர் அனைவரும் அருகில் உள்ள மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இது குறித்து ஆலங்குடி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X