என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திண்டுக்கல் அருகே 14 வயது சிறுமியை கடத்தி திருமணம் செய்த வாலிபர் கைது
Byமாலை மலர்7 Nov 2017 10:29 AM GMT (Updated: 7 Nov 2017 10:29 AM GMT)
திண்டுக்கல் அருகே 14 வயது சிறுமியை கடத்தி திருமணம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
வடமதுரை:
திருச்சி ஜே.ஜே.நகரைச் சேர்ந்த டேவிட் மகள் ரோசி (வயது 14 பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் வடமதுரை அருகே உள்ள ஒரு தனியார் மில்லில் வேலை பார்த்து வந்தார். கடந்த மாதம் மில்லில் இருந்து திடீரென மாயமானார். இது குறித்து மில் நிர்வாகம் சார்பில் அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
டேவிட் வடமதுரை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
போலீசார் விசாரணையில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள ஊரக்குடியைச் சேர்ந்த ஜெகநாதன் மகன் ஆனந்த் (22) என்பவருக்கும் ரோசிக்கும் பழக்கம் ஏற்பட்டது தெரிய வந்தது. நட்பு ரீதியில் பேசி வந்த ரோசியை ஆனந்த் ஆசை வார்த்தைகள் கூறி தனது ஊருக்கு அழைத்துச் சென்றார்.
பின்னர் அங்கே திருமணம் செய்து கொண்டு கேரளாவில் யாருக்கும் தெரியாமல் மறைந்து வாழ்ந்து வந்தனர். போலீசார் அவர்கள் இருவரையும் மீட்டு வடமதுரை போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தனர்.
ரோசியின் பெற்றோருக்கு இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சிறுமி காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார். சிறுமியை ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்த ஆனந்தை போலீசார் கைது செய்தனர்.
திருச்சி ஜே.ஜே.நகரைச் சேர்ந்த டேவிட் மகள் ரோசி (வயது 14 பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் வடமதுரை அருகே உள்ள ஒரு தனியார் மில்லில் வேலை பார்த்து வந்தார். கடந்த மாதம் மில்லில் இருந்து திடீரென மாயமானார். இது குறித்து மில் நிர்வாகம் சார்பில் அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
டேவிட் வடமதுரை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
போலீசார் விசாரணையில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள ஊரக்குடியைச் சேர்ந்த ஜெகநாதன் மகன் ஆனந்த் (22) என்பவருக்கும் ரோசிக்கும் பழக்கம் ஏற்பட்டது தெரிய வந்தது. நட்பு ரீதியில் பேசி வந்த ரோசியை ஆனந்த் ஆசை வார்த்தைகள் கூறி தனது ஊருக்கு அழைத்துச் சென்றார்.
பின்னர் அங்கே திருமணம் செய்து கொண்டு கேரளாவில் யாருக்கும் தெரியாமல் மறைந்து வாழ்ந்து வந்தனர். போலீசார் அவர்கள் இருவரையும் மீட்டு வடமதுரை போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தனர்.
ரோசியின் பெற்றோருக்கு இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சிறுமி காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார். சிறுமியை ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்த ஆனந்தை போலீசார் கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X