என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நாகர்கோவில் அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதல்: கட்டிட தொழிலாளி பலி
Byமாலை மலர்6 Nov 2017 2:13 PM GMT (Updated: 6 Nov 2017 2:13 PM GMT)
மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் கட்டிட தொழிலாளியை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லு வழியிலேயே அவர் இறந்தார்.
நாகர்கோவில்:
ராஜாக்கமங்கலம் அருகே உள்ள வைராகுடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் பாபு (வயது 30). கட்டிட தொழிலாளி. இவர் நேற்று இரவு தம்மத்துக்கோணத்தில் இருந்து ஆசாரிப்பள்ளத்திற்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அனந்த பாலம் அருகே வரும்போது எதிரே ஆசாரிப்பள்ளத்தில் இருந்து தம்மத்துகோணத்திற்கு மோட்டார் சைக்கிளில் வாலிபர் ஒருவர் வந்து கொண்டிருந்தார்.
எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு, நேர் மோதியது. இதில் தூக்கிவீசப்பட்டு பாபு பலத்த காயம் அடைந்தார். அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் அன்புபிரகாசம், சப்-இன்ஸ்பெக்டர் மனோகரன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஸ்டான்லிஜாண் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் இன்னொரு மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் தம்மத்துக்கோணத்தை சேர்ந்த மணிகண்டன் (28) என்பது தெரியவந்தது. போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராஜாக்கமங்கலம் அருகே உள்ள வைராகுடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் பாபு (வயது 30). கட்டிட தொழிலாளி. இவர் நேற்று இரவு தம்மத்துக்கோணத்தில் இருந்து ஆசாரிப்பள்ளத்திற்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அனந்த பாலம் அருகே வரும்போது எதிரே ஆசாரிப்பள்ளத்தில் இருந்து தம்மத்துகோணத்திற்கு மோட்டார் சைக்கிளில் வாலிபர் ஒருவர் வந்து கொண்டிருந்தார்.
எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு, நேர் மோதியது. இதில் தூக்கிவீசப்பட்டு பாபு பலத்த காயம் அடைந்தார். அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் அன்புபிரகாசம், சப்-இன்ஸ்பெக்டர் மனோகரன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஸ்டான்லிஜாண் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் இன்னொரு மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் தம்மத்துக்கோணத்தை சேர்ந்த மணிகண்டன் (28) என்பது தெரியவந்தது. போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X