என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கோவையில் புதுப்பெண் தற்கொலையில் காதல் கணவர் கைது
Byமாலை மலர்6 Nov 2017 11:00 AM GMT (Updated: 6 Nov 2017 11:00 AM GMT)
கோவையில் திருமணமான 24 நாளில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் காதல் கணவரை போலீசார் கைது செய்தனர்.
கோவை:
கோவை செல்வபுரம் பனைமரத்தூரை சேர்ந்தவர் பிருத்வி ராஜ்(வயது 27). பெயிண்டர்.
இவர் அதேபகுதியை சேர்ந்த கீதாவை(21) காதலித்து கடந்த மாதம் 11-ந்தேதி திருமணம் செய்து கொண்டார். கீதா நேற்று முன்தினம் வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
செல்வபுரம் போலீசார் நடத்திய விசாரணையில் குடும்ப பிரச்சனையில் பிருத்விராஜ் தனது மனைவி கீதாவை தாக்கியது தெரிய வந்தது. இதையடுத்து கீதாவை தற்கொலைக்கு தூண்டியதாகவும், கொடுமைபடுத்தியதாகவும் இரு பிரிவுகளில் பிருத்விராஜ் மீது போலீசார் வழக்குபதிவு செய்தனர்.
தப்பி ஓடிய பிருத்விராஜை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை ஜே.எம்.5 கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். இதற்கிடையே கீதா உடல் பிரேத பரிசோதனை முடிந்து அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
திருமணமான 24 நாளில் தற்கொலை செய்து கொண்டதால் ஆர்.டி.ஓ. விசாரணை நடக்கிறது. கீதா மற்றும் பிருத்விராஜின் குடும்பத்தினரிடம் ஆர்.டி.ஓ. மதுராந்தகி விசாரணை நடத்தி வருகிறார்.
கோவை செல்வபுரம் பனைமரத்தூரை சேர்ந்தவர் பிருத்வி ராஜ்(வயது 27). பெயிண்டர்.
இவர் அதேபகுதியை சேர்ந்த கீதாவை(21) காதலித்து கடந்த மாதம் 11-ந்தேதி திருமணம் செய்து கொண்டார். கீதா நேற்று முன்தினம் வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
செல்வபுரம் போலீசார் நடத்திய விசாரணையில் குடும்ப பிரச்சனையில் பிருத்விராஜ் தனது மனைவி கீதாவை தாக்கியது தெரிய வந்தது. இதையடுத்து கீதாவை தற்கொலைக்கு தூண்டியதாகவும், கொடுமைபடுத்தியதாகவும் இரு பிரிவுகளில் பிருத்விராஜ் மீது போலீசார் வழக்குபதிவு செய்தனர்.
தப்பி ஓடிய பிருத்விராஜை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை ஜே.எம்.5 கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். இதற்கிடையே கீதா உடல் பிரேத பரிசோதனை முடிந்து அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
திருமணமான 24 நாளில் தற்கொலை செய்து கொண்டதால் ஆர்.டி.ஓ. விசாரணை நடக்கிறது. கீதா மற்றும் பிருத்விராஜின் குடும்பத்தினரிடம் ஆர்.டி.ஓ. மதுராந்தகி விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X