search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவையில் புதுப்பெண் தற்கொலையில் காதல் கணவர் கைது
    X

    கோவையில் புதுப்பெண் தற்கொலையில் காதல் கணவர் கைது

    கோவையில் திருமணமான 24 நாளில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் காதல் கணவரை போலீசார் கைது செய்தனர்.
    கோவை:

    கோவை செல்வபுரம் பனைமரத்தூரை சேர்ந்தவர் பிருத்வி ராஜ்(வயது 27). பெயிண்டர்.

    இவர் அதேபகுதியை சேர்ந்த கீதாவை(21) காதலித்து கடந்த மாதம் 11-ந்தேதி திருமணம் செய்து கொண்டார். கீதா நேற்று முன்தினம் வீட்டில் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    செல்வபுரம் போலீசார் நடத்திய விசாரணையில் குடும்ப பிரச்சனையில் பிருத்விராஜ் தனது மனைவி கீதாவை தாக்கியது தெரிய வந்தது. இதையடுத்து கீதாவை தற்கொலைக்கு தூண்டியதாகவும், கொடுமைபடுத்தியதாகவும் இரு பிரிவுகளில் பிருத்விராஜ் மீது போலீசார் வழக்குபதிவு செய்தனர்.

    தப்பி ஓடிய பிருத்விராஜை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை ஜே.எம்.5 கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். இதற்கிடையே கீதா உடல் பிரேத பரிசோதனை முடிந்து அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

    திருமணமான 24 நாளில் தற்கொலை செய்து கொண்டதால் ஆர்.டி.ஓ. விசாரணை நடக்கிறது. கீதா மற்றும் பிருத்விராஜின் குடும்பத்தினரிடம் ஆர்.டி.ஓ. மதுராந்தகி விசாரணை நடத்தி வருகிறார்.
    Next Story
    ×