search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கள்ளக்குறிச்சியில் ‘வாக்கி டாக்கி’யை தொலைத்த போலீஸ் ஏட்டு சஸ்பெண்டு
    X

    கள்ளக்குறிச்சியில் ‘வாக்கி டாக்கி’யை தொலைத்த போலீஸ் ஏட்டு சஸ்பெண்டு

    பணியின் போது ‘வாக்கி டாக்கி’யை தொலைத்த போலீஸ் ஏட்டு சஸ்பெண்டு செய்யப்பட்டார்.
    கள்ளக்குறிச்சி:

    விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் ரவி என்பவர் ஏட்டாக பணியாற்றி வருகிறார்.

    சம்பவத்தன்று இவர் தனது மோட்டார் சைக்கிளில் கள்ளக்குறிச்சி நகர பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டார். அப்போது அவர் வைத்திருந்த காவல்துறைக்கு சொந்தமான வாக்கி டாக்கியை ரவி தொலைத்து விட்டார்.

    இது குறித்து கள்ளக்குறிச்சி போலீசார் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அவர், பணியின் போது அலட்சியமாக இருந்ததாக கூறி ஏட்டு ரவியை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.
    Next Story
    ×