search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னையில் பவள விழா: பிரதமர் மோடிக்கு தினத்தந்தி இயக்குனர் நினைவுப்பரிசு வழங்கினார்
    X

    சென்னையில் பவள விழா: பிரதமர் மோடிக்கு தினத்தந்தி இயக்குனர் நினைவுப்பரிசு வழங்கினார்

    தினத்தந்தி பவள விழாவில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு ‘தினத்தந்தி’ இயக்குநர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன், நினைவுப் பரிசு வழங்கி கவுரவித்தார்.
    சென்னை:

    சென்னை பல்கலைக் கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் இன்று ‘தினத்தந்தி’யின் பவள விழா வெகு விமரிசையாக நடைபெறுகிறது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து இன்று காலை தனி விமானம் மூலம் சென்னை வந்தார்.

    சென்னை விமான நிலையத்தில் அவரை கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் மத்திய மந்திரிகள், கட்சி தலைவர்கள் வரவேற்றனர். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் மெரினா கடற்கரை அருகேயுள்ள ஐ.என்.எஸ். கடற்படை தளத்தில் வந்து இறங்கிய மோடி, அங்கிருந்து குண்டு துளைக்காத காரில் தினத்தந்தி பவள விழா நடைபெறும் சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டப மேடைக்கு வந்தார்.



    அவரை, ‘தினத்தந்தி’ இயக்குநர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன், ‘மாலைமலர்’ இயக்குநர் பா.சிவந்தி ஆதித்தன் ஆகியோர் வரவேற்று மேடைக்கு அழைத்துச் சென்றனர். அதன்பின்னர் தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா தொடங்கியது. விழா மேடையில் இருந்த பிரதமர் நரேந்திர மோடி மற்றும் விழா மேடையில் அமர்ந்திருந்த கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மத்திய மந்திரிகள் நிர்மலா சீதாராமன், பொன்.ராதாகிருஷ்ணன், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு  ‘தினத்தந்தி’ இயக்குநர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன், ‘மாலைமலர்’ இயக்குநர் பா.சிவந்தி ஆதித்தன் ஆகியோர் பொன்னாடை அணிவித்து நினைவுப் பரிசு வழங்கினார்கள்.

    அதன் பின்னர், ‘தினத்தந்தி’ இயக்குநர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் வரவேற்புரை ஆற்றினார். அப்போது விழாவிற்கு வருகை புரிந்த மோடி மற்றும் தலைவர்களை அன்புடன் வரவேற்ற அவர், தினத்தந்தி ஆற்றி வரும் பணிகளை குறிப்பிட்டார். அத்துடன், இந்த  ஆண்டு தந்தி சார்பில் ஐ.ஏ.எஸ். அதிகாரி வெ.இறையன்பு, மூத்த தமிழறிஞர் விருது ஈரோடு தமிழன்பன், தொழில் அதிபர் வி.ஜி.சந்தோஷம் ஆகியோருக்கு பிரதமர் மோடி விருதுகளை வழங்குவார் என்றும் தெரிவித்தார்.


    Next Story
    ×